தாய்க்கு நிகர் யாருமில்லை
UPDATED : மே 02, 2016 | ADDED : மே 02, 2016
* தாயின் அன்புக்கு இணையானது ஏதுமில்லை. கடவுளும் தன் அடியவர்கள் மீது தாய் போல அன்பு செலுத்துகிறார்.* நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலையும் கடவுள் நன்றாக அறிவார். அவருடைய பார்வையில் இருந்து தப்ப முடியாது.* கடவுள் மீது தன் முழு கவனத்தையும் செலுத்துபவன் வாழ்வில் துன்பத்தில் இருந்து விடுபடுவான்.* உடம்பை புறக்கணிக்க வேண்டாம். அதே சமயத்தில் விரும்பிச் செல்லமாகப் பராமரிக்கவும் வேண்டாம்.* கடவுள் சிந்தனை மனதில் பதிய வேண்டும். உலக இன்பங்களுக்காக ஒருபோதும் வழி தவறாதீர்கள்.- ஷீரடிபாபா