உள்ளூர் செய்திகள்

துணிவுடன் போராடு

* பிரச்னை குறுக்கிடும் போது, மனம் தளர்வது கூடாது. நேர்வழியில் துணிவுடன் போராட வேண்டும்.* ஆசைகளை அடியோடு ஒழிக்க முடியாது. அதை சீரமைத்துக் கொள்வதே நல்லது.* பிறரைக் குத்திக் காட்டுவது போல அறிவுரை சொல்லக் கூடாது. தவறை உணர்ந்து திருந்தும் விதத்தில் அமைய வேண்டும்.* பிறர் மீது கோபம் கொள்ளும் போது அந்தக் குறை நம்மிடம் இருக்கிறதா என்றும் சிந்திக்க வேண்டும்.* அறிவை உணர்ச்சி வெல்வது இயல்பு. அறிவால் உணர்ச்சியை வெல்வது உயர்வுக்கு வழிவகுக்கும்.வேதாத்ரி மகரிஷி