/ புகார் பெட்டி / காஞ்சிபுரம் / காஞ்சிபுரம்: புகார் பெட்டி; பயணியர் நிழற்குடையில் தரை சீரமைக்கப்படுமா?
காஞ்சிபுரம்: புகார் பெட்டி; பயணியர் நிழற்குடையில் தரை சீரமைக்கப்படுமா?
பயணியர் நிழற்குடையில் தரை சீரமைக்கப்படுமா?
உ த்திரமேரூர் ஒன்றியம், கம்மாளம்பூண்டி ஊராட்சி, நெல்லி காலனியில், இரண்டு ஆண்டுகளுக்கு முன், பயணியர் நிழற்குடை கட்டப்பட்டது. நிழற்குடை தரையில் பதிக்கப்பட்டுள்ள 'டைல்ஸ்கற்கள்' உடைந்த நிலையில் உள்ளன. மேலும், பல டைல்ஸ் கற்கள் உடையும் நிலையில் உள்ளன. உடைந்த டைல்ஸ் கற்கள் பயணியரின் கால்களை பதம் பார்க்கும் நிலையில் உள்ளன. எனவே, நெல்லி காலனி பேருந்து நிறுத்த பயணியர் நிழற்குடையில், சிதிலமடைந்துள்ள டைல்ஸ் பதிக்கப்பட்ட தரையை சீரமைக்க, வட்டார வளர்ச்சி அலுவலக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். - சு.வெங்கடேசன், உத்திரமேரூர்.