பெயரோ பைவ் ஸ்டார்; இருளே டாப் ஸ்டார்
குப்பைக்கு தீ வைப்பு திருப்பூர் 58வது வார்டு பூங்கா நகரில் குப்பையை கொட்டி ஆட்கள் நடமாட்டம் குறைவாக உள்ள நேரங்களில் தீ வைத்து சென்று விடுகின்றனர். கடும் துர்நாற்றத்துடன், வாகன ஓட்டிகளை புகை சூழ்கிறது. - மகேஷ்குமார், கோவில்வழி அலறும் மைக் திருப்பூர் எஸ்.வி. காலனியில் காலை முதல் இரவு வரை ஆட்டோக்களில் வியாபாரம் என்ற பெயரில் பெரிய மைக்குகளுடன் அதிக சத்தத்துடன் அலற விடுகின்றனர். பெரும் இடையூறாக உள்ளது. - உமாசங்கர், எஸ்.வி. காலனி. தரையே இருக்கை அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் மகப்பேறு சிகிச்சைக்கு வரும் மக்கள், போதிய இருக்கை வசதியில்லாத காரணமாக தரையில் அமர்ந்து வருகின்றனர். - ஈஸ்வரமூர்த்தி, திருப்பூர். ரோடு படுமோசம் கரைப்புதுார் ஊராட்சி மீனாம்பாறையில் மூன்று ரோடு சந்திக்கும் பகுதியில் சிமென்ட் ரோடு படுமோசமாக உள்ளது. வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். - செல்வராஜ், மீனாம்பாறை. மண்ணரையில் இருந்து ராக்கியாபாளையம் செல்லும் ரோட்டில் கருப்பராயன் கோவில் அருகே பல மாதங்களாக பணிகள் செய்யாமல் ரோடு குண்டும் குழியுமாக உள்ளது. - ஜமுனா, மண்ணரை. தண்ணீர்... தண்ணீர் திருப்பூர் முத்தீஸ்வர் நகரில் முறையாக குடிநீர் வினியோகம் செய்வதில்லை. அதிகாரிகளிடம் தெரியப்படுத்தியும் நடவடிக்கை எடுப்பதில்லை. - சோனல், முத்தீஸ்வர் நகர். கிடப்பில் பணி பழங்கரை, பெரியாயிபாளையம் கிராமத்தில் கட்டப்பட்டு வரும் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கட்டுமான பணி, பல மாதங்களாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. - ஆறுமுகம், பெரியாயிபாளையம். இருளே துணை முத்தணம்பாளையம் வாய்க்கால்மேடு பைவ் ஸ்டார் நகரில் தெருவிளக்கு வசதியில்லாமல் உள்ளது. பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. - ராஜூ, முத்தணம்பாளையம். பெரிதாகும் குழி திருமுருகன்பூண்டி, கூட்டுறவு நகரில் பழைய போலீஸ் ஸ்டேஷன் அருகே உள்ள குழி நாளுக்கு நாள் பெரிதாகி கொண்டுள்ளது. விபத்து அபாயம் உள்ளது. - விஜி, கூட்டுறவு நகர். தேங்கும் கழிவுநீர் பழங்கரை, அவிநாசிலிங்கம்பாளையத்தில் கழிவுநீர் ரோட்டில் குளம் போல் தேங்கி சுகாதாரக்கேடாக காட்சியளிக்கிறது. - பாலசுந்தரம், அவிநாசிலிங்கம்பாளையம். விபத்து அபாயம் திருப்பூர் மாநகராட்சி பூங்கா ரோடு குறிப்பிட்ட பகுதியில் ஜல்லிக்கற்களால் நிறைந்துள்ளது. விபத்து ஏற்படும் முன், ரோடு போட வேண்டும். - வின்சென்ட்ராஜ், ராயபுரம். வீணாகும் தண்ணீர் பலவஞ்சிபாளையம், காளிகுமாரசாமி கோவில் எதிரில் தண்ணீர் குழாய் உடைந்து, ரோட்டில் வீணாக தேங்கி நிற்கிறது. - காயத்ரி, பலவஞ்சிபாளையம். --- ரியாக்ஷன் சீரானது கால்வாய் கணக்கம்பாளையம் பிரிவில் இருந்து பொங்குபாளையம் செல்லும் ரோட்டில் சாக்கடை நீர் ரோட்டை கடந்தது. இப்பிரச்னைக்கு உடனடி தீர்வு காணப்பட்டது. - பழனிசாமி, கணக்கம்பாளையம்.