உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / தகவல் சுரங்கம் / தகவல் சுரங்கம் : முதல் சிவில் சர்வீஸ் அதிகாரி

தகவல் சுரங்கம் : முதல் சிவில் சர்வீஸ் அதிகாரி

தகவல் சுரங்கம்முதல் சிவில் சர்வீஸ் அதிகாரிஇந்தியன் சிவில் சர்வீஸ் (இந்திய ஆட்சிப்பணி) அதிகாரியாக தேர்வான முதல் இந்தியர் சத்தியேந்திரநாத் தாகூர். 1842 ஜூன் 1ல் கோல்கட்டாவில் பிறந்தார். பிரசிடென்சி கல்லுாரியில் படித்தவர். கவிஞர், எழுத்தாளர், இசையமைப்பாளர், சமூக சீர்திருத்தவாதி, மொழியியலாளர் என பன்முக திறமை கொண்டவர். பிரம்ம சமாஜத்தின் உறுப்பினராகவும் இருந்துள்ளார். 1864ல் சிவில் சர்வீஸ் பணியில் சேர்ந்தார். பெண்கள் விடுதலை குறித்து நுால்கள் எழுதியுள்ளார். தேசபக்தி உட்பட பல பாடல்களையும் எழுதியுள்ளார். 1923 ஜன., 9ல் மறைந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !