சாவதே மேல்!
ஒரு சமயம் ஹிட்லரை ஒரு நிருபர் பேட்டியெடுக்க வந்தார். ஹிட்லரிடம் நிருபர், ''உங்கள் வெற்றியின் ரகசியம் என்ன?'' என்றார்.ஹிட்லர் அவருக்குப் பதில் சொல்லாமல் கோட்டை மதில்மேல் நின்ற படைவீரனைப் பார்த்து, ''கீழே குதி!'' என்றார்.அவனும் மறுபேச்சில்லா மல் உடனே குதித்துவிட்டான்.''பார்! இதுதான் என் வெற்றியின் ரகசியம்!'' என்றார்.நிருபர் விடாமல், ''சரி... அவர் சாதாரண படை வீரர். அதனால் குதித்தார். ஒரு பெரிய அதிகாரி குதிப்பாரா?'' என்று கேட்டார்.ஹிட்லர் ஒரு கர்னலைப் பார்த்து, ''கீழே குதி!'' என்றார்.அந்தக் கர்னலும் உடனே குதிக்க முயல, நிருபர் ஓடிப் போய் தடுத்து கர்னலிடம், ''என்ன சார்? ஒரு கர்னல் நீங்களுமா?'' என்று கேட்டார்.நிருபர் காதில் கர்னல், ''அட போய்யா, இவர் கிட்ட வேலை செய்வதை விட குதிச்சு சாவதே மேல்,'' என்று கூறினார்.