உள்ளூர் செய்திகள்

கட்சிப் பணிக்காக வாழ்க்கையை அர்ப்பணித்தவர்!

நம் அரசியல்வாதிகளில் பலர், சின்ன வீடு, பெரிய வீடு என்ற தாங்கள் பெற்றுப் போட்ட குழந்தைகளுக்கு சொத்து சேர்ப்பதை அறிவோம். ஆனால், திருமணமான அன்றைக்கே, கட்சிப் பணிக்காக, குழந்தை வேண்டாம் என்று முடிவு செய்த அரசியல்வாதிகளும் இருக்கின்றனர். மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சி தலைவர் பிரகாஷ் கராத்துக்கும், பிருந்தாவுக்கும் திருமணமானபோது, இப்படி ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டனர். தற்போது, பிருந்தாவுக்கு, 70 வயது ஆகிறது. இப்போதும் சுறுசுறுப்பாக கணவருடன் இணைந்து, கட்சிப் பணி ஆற்றுகிறார்.— ஜோல்னா பையன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !