சாயம் பூசாத ஹோலி பண்டிகை!
படத்தில் இருப்பவர்கள், ஆப்ரிக்காவின் பழங்குடி மக்கள் அல்ல, இந்தியர்கள்; மகாராஷ்டிராவை சேர்ந்தவர்கள். மகாராஷ்டிரா - குஜராத் எல்லையில் இருக்கிறது, நந்துார்பர்.இங்குள்ள கரடி கிராமத்தை சேர்ந்த இவர்கள், ஹோலி பண்டிகையின்போது, இடுப்பில் காய்ந்த சுரக்காய் ஓடுகளை கட்டி நடனம் ஆடுவது வழக்கம். உடல் அசைவின்போது, சுரக்காய்கள் ஒன்றோடு ஒன்று மோதி, இனிமையான ஒலி எழும். இவர்கள் இதை, 'ராஜேவாடி ஹோலி' என்று அழைக்கின்றனர்.ஜோல்னாபையன்