உள்ளூர் செய்திகள்

கவிதைச்சோலை!

காதலுக்கு மருந்து போடுகிறேன்!* காதலே...உன் வரையறை தான் என்ன?* மொழிகள் பிறக்கும் முன்நீ பிறந்ததாலோ என்னவோஉன்னை வரையறுக்கஎங்களால் முடியவில்லைஇன்று வரை!* வார்த்தைகளில் வார்த்தெடுத்துஉன்னைச் செதுக்குகிறோம்ஒவ்வொருவரும் வெவ்வேறுசிலையாகவே!* இன்று வரை நீயும்ஒரு மதமாகவேவிதவிதமான கலாசாரத்தின்பிரதிபலிப்பாய்உலகத்து வீதிகளில்உட்கார்ந்துவிளையாடிக் கொண்டிருக்கிறாய்...கடவுளும், நீயும்,வேறில்லை என்பதாலா?* ஆதாமும், ஏவாளும்ஆக்கி வடித்த கூட்டாஞ்சோற்றில்நீ பிறந்திருக்கலாம்...கையில் ஆப்பிளுடன்ஹார்ட்டின் வடிவத்தில் - என்பதுஎங்கள் ஐதீகம்!* வள்ளுவன் வடித்தான்...காதலுக்குள் காமம் என்றுஉன்னை வைத்துஒரு ஓவியம் படைத்தான்!* நவீன வாலிபன் உடைத்தான்...பழைய மரபுஅது எனக்கூறிகாமத்திற்குள் காதல் வைத்துகலாசாரப் பின்னணியில்புதுக்காதலைப் படைத்தான்அதற்கு கடையும் விரித்தான்!* காவியங்களில் நீயோதெளிந்த நீரோடை...இந்தக் காலத்தில் நீயோகலங்கிச் செல்லும்கழிவு நீரோடை!* உந்தன் உடை களையப்பட்டுநீ காயம்பட்டிருப்பதுநிஜம்!* உண்மை சொல்காதலே உன் வரையறைதான் என்ன?* அடுத்த தலைமுறைஉன்னைத் தீண்டும் முன்மருந்து போடுகிறேன்!- த.மலைமன்னன், புனல்வேலி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !