உள்ளூர் செய்திகள்

கவிதைச்சோலை

காலம்!கோவணம்கட்டத் தெரியாதஇக்காலத்திலும்பேருந்து நிலையங்களில்அர்ணா கயிறுவிற்கிறார் ஒருவர்!ஜீரண சக்திக்குபற்பல மருந்துகள்வந்து விட்டபோதும்இஞ்சி மிட்டாய்விற்கிறார் ஒருவர்!வாசல் முற்றம்தெரியாமல் அடுக்குமாடிகுடியிருப்புகள்வந்து விட்டபோதும்தெரு தெருவாய்கோல மாவுவிற்கிறார் ஒருவர்!தன் எதிர்காலம்அறியாமல் பிறர்எதிர்காலம் சொல்லும்கூண்டுக்கிளி வைத்துபிழைத்து வருகிறார்ஒருவர்!வீதிக்கு வீதிகாய்கறிகள் விற்கும்'ஏசி' சூப்பர் மார்க்கெட்டுகள்வந்து விட்டபோதும்தெருவில்கூறு கட்டி காய்கறிவிற்கிறார் ஒரு பாட்டி!யாரையும் ஏமாற்றாமல்எக்காலத்திலும்வாழ வைத்து கொண்டிருக்கிறதுஉழைப்பும், முயற்சியும்நம்பிக்கையும்!— சொல்கேளான் ஏ.வி.கிரி,சென்னை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !