கவிதைச்சோலை!
என்ன நடந்தது?வந்தது ஓரிடம்வாழ்ந்ததும் ஒரேயிடம்எல்லாமும் எங்கள் ஏழு பேர் தான்என எண்ணியிருந்தேன்...இருபது வயது வரை!அண்ணன் என்றும்தங்கை என்றும் அறியாமல்ஒருவர் மீது மற்றொருவர்உருண்டு, புரண்டு, அடித்து, பிடித்து...வாயில் உள்ளதை பிடுங்கி உண்டுவந்ததை எல்லாம் வாங்கித் தின்றுஎப்படி எல்லாம் வாழ்ந்தோம் அன்று...இப்போது இல்லையே அப்போது போல்!அண்ணன் எங்கோ ஒரு ஊரில்தம்பி எங்கோ தனியாகசண்டையோ, சச்சரவோ இல்லைஎனினும் இல்லையே அப்போதைய அன்பு!நண்பர்களிடம் பல மணி நேரம் பேச்சுகுழந்தைகளுடன் நாள் முழுக்க கூத்துபேசிப் பேசியே போரடிக்கிறோம்அண்ணன், தம்பியிடம் அப்படியில்லையே...இப்படி இருந்ததில்லையே அப்போது!கும்பலாக குளியல்; ஒன்றாகத் தூக்கம்தலை வார ஒரே அழுக்கு சீப்பு...ஒரே தலையணையில் ஐந்து தலைகள்!விழித்து பார்த்தால்...தம்பியின் காலோ என் தலையில்தங்கையின் கையோ என் வயிற்றில்ஒன்றாக அமர்ந்து களேபர சாப்பாடு...வீட்டில் ஒரே கூப்பாடுமறந்து போனதே எவ்வாறு...அன்பை விதைத்தஆசை தங்கையையும்அடித்தாலும் ஓடி வந்துஅணைக்கும் தம்பியையும்கதை சொல்லி தூங்கவைத்த அக்காவையும்பார்த்து பல வாரங்களாயிற்று...தூக்கி வளர்த்த அவளின் குழந்தைகளையோபார்க்கவும் நேரமில்லை இப்போது!அம்மா, அப்பா இருந்தும்நாங்கள் ஏன் தனித்தனி மரங்களாய்...பணம் இருந்திருந்தால்ஒன்றாய் இருந்திருப்போமோ...இப்போது அது இருக்கத் தானே செய்கிறதுஆனாலும் எண்ணம் இல்லையே ஏன்...இதுதான் வாழ்க்கை பயணமா...அப்படியானால் ஒன்றாக ஏன் பிறந்தோம்வெவ்வேறு தாய்க்கு பிறந்திருக்கலாமே!அம்மா சொல்லியிருக்கிறாள்...அவளுடையது கூட்டுக்குடும்பமாம்நாங்கள் மட்டும் எப்படி தனித் தனியானோம்...என்னுடன் என் மகன்அண்ணனுடன் அவன் மகள்தங்கையோ தன் மகனுடன்அடுத்த மாநிலத்தில் அக்கா!அனைவரும் முன் போல்ஒன்றாய் வாழ வாய்ப்பில்லையா...அதற்கு எங்களுக்கு மனமில்லையா?அது பற்றி யோசிக்கவில்லையா...தனிமரம் தோப்பாகாது என தெரிந்தும்தோப்புகளை உருவாக்க முயற்சித்துதோற்கிறோம் தினம்தோறும்செடிகளை தோப்பாக எண்ணி!மீண்டும் ஒன்றாக பிறக்கத் தான் முடியுமா?மனமிருந்தால் இப்போது ஒன்றாக வாழ முடியும்இதன் பிறகாவது முயற்சிப்போமே!— அ.சுருளியப்பன், நெல்லை.