கவிதைச்சோலை!
வருகிறது தேர்தல்!வருகிறது தேர்தல்தயாராகுங்கள் ஏந்தல்களே!வாக்குறுதிகளைவக்கணையாய் கூறிவாக்கு கேட்டு வரப் போகின்றனர்!பாரீன் மாதிரிஆக்குவேன் என்பார் ஒருவர்...'சரக்கே' கிடையாதென்பார் மற்றொருவர்...வெற்றி பெற்றதும்சரக்கை ஏற்றிபாரீனுக்கேபறந்து விடுவர்!ஓட்டுப் போடமெட்ரோ ரயிலில் கூடமெனக்கெட்டு கூட்டி வருவர்...ஓட்டு போட்டு முடிந்ததும்பாசஞ்சர் ரயிலில் கூடஏற்றி விட மாட்டார்கள்!பட்டொளி வீசிபறந்த மூவர்ணக்கொடிபிளக்ஸ் பேனர்களால்மறைக்கப்படும்!நேற்று வரைநாயே பேயே என வசை பாடியவர்கள்நாகரிகமாகநடந்து கொள்வர்!அழைக்காமலேயேஅலைபேசியில் பேசும் தலைவர்வெற்றி பெற்றதும்தொடர்பு எல்லைக்குவெளியே இருப்பார்!பொதுத் தேர்வுக்குவிழுந்து விழுந்துபடிக்கும் மாணவனுக்கும்பொதுத் தேர்தலில்விழுந்து விழுந்துவாக்கு கேட்கும்வேட்பாளருக்கும்பெரிய வித்தியாசமில்லை!மாணவன் வெற்றி பெற்றால், 'காலேஜ்''மாண்புமிகு' வெற்றி பெற்றால், 'எங்கேஜ்!'நாம்ராமாவரத்தை பார்த்திருக்கோம்...கோபாலபுரத்தை பார்த்திருக்கோம்...தைலாபுரத்தை பார்த்திருக்கோம்...போயஸ் தோட்டத்தை பார்த்திருக்கோம்...நெல்லுக்கு ஆசைப்பட்டுசொல்லுக்கு சீட்டெடுக்கும்பரிதாபத்திற்குரியபொது ஜன கிளியை எவராவதுபார்த்திருக்கிறீர்களா?மாற்றமே மானிடதத்துவம் என்பதை அரசியல்வாதிகள்கடன் வாங்குவது இருக்கட்டும்...வாக்களித்த மக்களுக்குநன்றியோடு பணியாற்றுவோருக்குவாக்களிப்போம்!உங்கள் ஓட்டுகள்சட்டமன்றத்திற்குமாண்புமிகுகளை அல்லமனிதர்களை அனுப்பட்டும்!— பாலா சரவணன், சென்னை.