கவிதைச்சோலை!
பூங்காவனமாய் பூத்துக்குலுங்கும் புத்தாண்டு!வண்ணங்கள் தடம் மாறிவானவில்லாய் வளைவது போல்எண்ணங்களின் வீச்சில்என்றென்றும் இளமையோடுவீறுநடை போடும்ஒவ்வொரு நாளும்இதயங்களை வசீகரிக்கும்இனிமையான நாட்களாக வேண்டும்!நாட்கள் நகர்ந்து கொண்டேஇருந்தாலும்...பூக்களை போல் நிதமும்பூமணம் வீச வேண்டும்!பூப்போன்ற நாட்கள்புனிதம் சேர்க்கும்வசந்த வாழ்க்கையாய்அனைவரையும்வசப்படுத்த வேண்டும்!வசப்படுத்திய வாழ்க்கையைசுகப்படுத்தும் வல்லமையை மீட்டெடுக்கும் உன்னதம்ஒவ்வொருவருக்குள்ளும்உயிர்த்தெழ வேண்டும்!உயிர்த்தெழும் மனிதாபிமானஉணர்வுகளுக்குகலங்கரை விளக்கமாய் நின்றுகாலங்கள்கைபிடித்து செல்ல வேண்டும்!கையசைவுகளில் மிளிர்கின்றகண நேர பொழுதுகளும்கை காட்டி மரங்களாய்எல்லாருக்கும்வழி காட்டிட வேண்டும்!வழிகாட்டிகள் இல்லாதவனாந்திரத்தின்தீராத திக்குகள் தோறும்திசைகாட்டிகளாய்எல்லா காலங்களும்இயங்கிட வேண்டும்!இயங்குதல் இல்லையேல்வாழ்க்கையில்லை என்பதைஒவ்வொரு மனிதருக்குள்ளும்உணர்த்திடல் வேண்டும்!உணரும் காலங்கள்உச்சம் தொட்டஉயர்வின் கோலங்களாய்நம்மை விட்டுகடந்த காலங்கள்காணாமல் போனாலும்...இனி, வருங்காலங்கள்எல்லாருக்கும்இனிய பூங்காவனமாய்என்றென்றும்பூத்துக் குலுங்கட்டும்இந்த இனிய புத்தாண்டு!ஜோதி பாரதி, தேனி.