உள்ளூர் செய்திகள்

கவிதைச்சோலை!

இன்றாவது நினைத்துப் பார்!கட்டடங்களைபார்க்கும்போதெல்லாம்அஸ்திவாரம் நினைவுக்குவந்ததுண்டா...இன்றாவது நினைத்துப் பார்!ஆடை அணியும்போதெல்லாம்அங்காடிகளை தவிரஅதை நெய்தவன் நினைவுஎப்போதாவது வந்திருக்கிறதா...இன்றாவது நினைத்துப் பார்!தீப்பெட்டிகளை திறக்கும்போதுதீக்குச்சியின் மருந்து தலைகளைபார்க்கும்போதும்பாஸ்பரஸ் நெடியில் பணி செய்யும்மழலைகள் நினைவுக்கு வருமா...இன்றாவது நினைத்துப் பார்!உன் வியர்வை நாற்றம் போக்கும்வாசனை சோப்பைபயன்படுத்தும்போதெல்லாம்அதற்காக உழைத்தவனின்வியர்வை வாசம் உணர முடிகிறதா...இன்றாவது நினைத்துப் பார்!சாலையில் நடந்து போகையிலும்வாகனங்களில் செல்கையிலும்தகிக்கும் வெயிலில்தாரை உருக்கி ஊற்றியவனைநினைத்து பார்த்திருக்கிறாயா...இன்றாவது நினைத்துப் பார்!நீ பசித்து உண்ணும்போதெல்லாம்தன் பசியை போக்க முடியாமல்போனாலும்விடாப்பிடியாக விவசாயம் செய்யும்உழவனை நினைத்து பார்த்திருக்கிறாயா...இன்றாவது நினைத்துப் பார்!அது போகட்டும்...சமையல் அறையிலிருந்துவரும் உணவின் வாசம்உன் நாசியை துளைக்கும்போதும்நாவில் எச்சில் வழிய காத்திருக்கும்போதும்வீட்டு பெண்களின் சலியா உழைப்பையாவதுசற்றே நினைத்திருப்பாயா...இன்றாவது நினைத்துப் பார்!டி.என்.முரளிதரன், சென்னை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !