கவிதைச்சோலை!
இன்புற்றிருப்போம்!இதய வாசலைஎப்போதும் திறந்தே வைத்திருங்கள்எதிரியாய் வருபவர்களும்கொஞ்சம் இளைப்பாறிச் செல்லட்டும்!இன்ப நாடகத்தைஎப்போதும் நடத்திக் கொண்டேயிருங்கள்துன்பத்தோடு வருபவர்களும்கொஞ்சம் தொலைத்து விட்டு செல்லட்டும்!அன்பு வார்த்தைகளைஎப்போதும் அளித்துக் கொண்டேயிருங்கள்அம்பெடுத்து வருபவர்களும்கொஞ்சம் அயர்ந்து செல்லட்டும்!வாசப் பூக்களைஎப்போதும் வீசிக் கொண்டேயிருங்கள்வஞ்சனையோடு வருபவர்களும்கொஞ்சம் வாசமெடுத்து செல்லட்டும்!பாசப் பார்வையைஎப்போதும் பூசிக் கொண்டேயிருங்கள்வேஷமிட்டு வருபவர்களும்கொஞ்சம் விழுந்து விட்டு செல்லட்டும்!பொறுமை பந்தலைஎப்போதும் போட்டுக் கொண்டேயிருங்கள்பொறாமையில் வருபவர்களும்கொஞ்சம் பெருமை பேசி செல்லட்டும்!நல்ல நட்பைஎப்போதும் நல்கி கொண்டேயிருங்கள்நன்றி மறந்தவர்களும்கொஞ்சம் நண்பர்களாகி செல்லட்டும்!இன்று போலவே என்றும்நல் எண்ண விதைகளைநடை பாதையெல்லாம் நட்டு வையுங்கள்நாளைய உலகம் நந்தவனமாகட்டும்நாம் இன்புற்றிருப்போம்இனிய உறவுகளால் என்றென்றும்!அ.ரேவந்த், கொச்சி.