உள்ளூர் செய்திகள்

கவிதைச்சோலை...

கொடுப்பினை இல்லை!நகரும் நாட்களில்,நான் படும்பாட்டைஎண்ணி அழுகிறேன்...எழுத்தில் வடிக்கிறேன்!அதிகாலை விடியலில்குயிலின் கூவலையோபூபாள ராகத்தையோரசிக்க நேரமில்லை...குக்கர் விசிலிலும்கூட்டுப் பொரியலிலும்குழம்பி போகிறேன்!அழும் குழந்தையைஅரவணைக்கப் போய்,அடுப்பிலே பாலைபொங்க விட்டு...அதைப் பார்க்கும்போதேஅடுத்ததை கோட்டை விட்டு...அப்பப்பா!அடுப்படியிலே அஷ்டாவதாணியாய்அரிதாரம் பூசி...அலுவலகம் விரைகிறேன்!வாரறுந்த செருப்பைவாகாக மாட்டி...தோலுரிந்த கைப்பையைதோளிலே தொங்க விட்டுஓட்டமும் நடையுமாய்ஓயாமல் விரைகிறேன்!பாரம் தாங்காமல்சாய்ந்து வரும்அரசுப் பேருந்தில்,அசாத்தியமாய் நுழைந்துஅடுத்தவர் காலை மிதித்து,'சாரி' எனும் சொல்லிலேசங்கடத்தை உணர்த்தி...நான் மிதிபடும் போது'அம்மா' எனும்அவலக்குரல் எழுப்பி...வியர்வை மழையில் நனைந்துநிற்கவும் வழியின்றி தவித்து,விஷமம் செய்யும் வீணரிடமிருந்துவிலக முடியாமல்விழியால் எச்சரித்துவிதியை நொந்து கொள்கிறேன்!அவதி அவதியாய்அலுவலகம் நுழைந்தாலும்அதிகாரியின், 'அலட்சிய' பார்வையில்அடங்கிப் போகிறேன்!கடமையே கதியென்றுகண்ணை மூடிக் கொள்கிறேன்!அலுத்து களைத்து வீடு வருகையில்யாரேனும் ஒரு, 'கப்'காபி கொடுத்தால், 'தேவலை'என நினைக்கிறேன்!கொடுக்க யாருமில்லை...அந்தக்கொடுப்பினை எனக்கு இல்லை!காபி கரிக்கிறதுஎன்கண்ணீரும் கலந்ததனால்!— ஆர்.சத்யா, மதுரை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !