கவிதைச்சோலை...
உலகில் இடம் பிடி!சிரிக்கத் தெரிந்தவனும்சிந்திக்கத் தெரிந்தவனும்மட்டுமல்ல மனிதன்சாதிக்கப் பிறந்தவனும் மனிதனே!சாதனைசாதாரணமானதல்லஅது சோதனை மிக்கதுகாயங்களின்றி கனவு காணலாம்...ஆனால்கனவுகள் நனவாககாயம்பட்டாக வேண்டும்!சாதிக்கப் பிறந்தவருக்கென தனியாகஜாதியேதும் ஒதுக்கப்படவில்லைஎவரும் பிறக்கும் போதேபடைப்பதல்ல சாதனைஅதற்கெனஉழைக்கும்போது படைப்பது!சாதனைக்கும், வயதுக்கும்சம்பந்தமில்லைஎட்டயபுரக் கவிஞனுக்குபாரதி பட்டம் கிட்டியதுபதினொரு வயதில்!குற்றாலீஸ்வரன்ஆங்கில கால்வாயைநீந்திக் கடந்ததுபனிரெண்டு வயதில்!அலெக்சாண்டர் அரியணை ஏறியதுஇருபது வயதில்எடிசனின்அறிவியல் சாதனையின் ஆரம்பம்இருபத்தொரு வயதில்!இளைஞனேசாதனை என்பதுஅசாதாரணமானதென்றாலும் கூடஉன்னுள் ஓர்லட்சிய வேட்கையும்முயற்சியும், பயிற்சியும்முழுமையாய் இருப்பின்சாதனை சாதாரணமாகி விடும்!விழித்திருந்து கனவு காண்அந்தக் கனவுநனவாகும் வரை விழித்திரு!தடம் பார்த்து நடப்பவர்கள்சாதாரணமானவர்கள்தடம் பதித்து நடப்பவர்கள்சரித்திரம் படைப்பதற்கென்றே பிறந்தசாதனை மனிதர்கள்!நீ தடம் பதிக்க அடம்பிடிஅடம்பிடித்து அடம்பிடித்துஉலகில் இடம் பிடி!— மீனாசுந்தர், காஞ்சிபுரம்.