உள்ளூர் செய்திகள்

ஷகீலாவின் சோகம்!

கவர்ச்சி நடிகை, ஷகீலாவுடன் இருப்பவர் பெயர், தங்கம்; திருநங்கையான இவரை தன் வளர்ப்பு மகளாக தத்தெடுத்துள்ளார், ஷகீலா. இது குறித்து கூறும்போது, 'நிறைய பணம் சம்பாதித்து, அம்மாவிடம் கொடுத்தேன்; அவர், அதை அக்காளிடம் கொடுத்தார். கடைசியில், எல்லாரும் என்னை ஏமாற்றி, வீட்டை விட்டு வெளியேற்றினர். இன்று தனி மரமாக உள்ளேன். இப்போது, எனக்கு துணையாக இருப்பது, என் மகள் தங்கம் மட்டும் தான், தெலுங்கு மற்றும் கன்னட படங்களில் நடிக்கிறேன். படப்பிடிப்பின் போது, மது அருந்துவது இல்லை; வீட்டுக்கு வந்தவுடன், அளவுக்கு அதிகமாக குடிப்பேன். இதனால், என் உடல் நலம் பாதிக்கப்பட்டது. தற்போது, மருத்துவர் குடிப்பதை நிறுத்தச் சொன்னதால், மது அருந்துவதை நிறுத்தியுள்ளேன்....' என்கிறார், ஷகீலா.— ஜோல்னாபையன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !