இது சரியா, ஆபீசர்ஸ்!
மயில், நம்முடைய தேசிய பறவை; அதை, துன்புறுத்துவதோ, கொல்வதோ குற்றமாக கருதப்பட்டு வரும் நிலையில், வட மாநிலங்களில், சில இடங்களில், மயில்களை கொன்று, வறுத்து, அதிலிருந்து வெளிவரும் எண்ணெயை எடுத்து விற்பனை செய்கின்றனர். இக்கொடுமையை, வன விலங்கு ஆர்வலர்கள் மற்றும் அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை என்பதுதான் வருத்தத்திற்குரியது! —ஜோல்னாபையன்.