உள்ளூர் செய்திகள்

கவிதைச்சோலை: பலத்தை காட்டிடுங்கள்!

* மூழ்கி விட்டாய் என்று மற்றவர்கள் காழ்ப்புணர்வில் கைதட்டி சிரித்திடும் போது முத்துக்களை அள்ளிக்கொண்டு மேலேறி வந்து மார்தட்டுங்கள்! * சறுக்கி விட்டாய் என்று மற்றவர்கள் வெறுப்புணர்வில் ஏளனம் செய்திடும் போது தவறுகளை திருத்திக்கொண்டு முன்னேறிச் சென்று வென்றிடுங்கள்! * வீழ்ந்து விட்டாய் என்று மற்றவர்கள் பகையுணர்வில் ஏளனம் பேசிடும் போது குதிரையென துள்ளியெழுந்து இலக்கை விரைந்து எட்டுங்கள்! * பயந்து விட்டாய் என்று மற்றவர்கள் ஆணவ உணர்வில் எகத்தாளம் கொள்ளும் போது எதிர்பாராத அதிர்ச்சி தந்து புத்திக்கூர்மையை நிரூபித்திடுங்கள்! * அடங்கி விட்டாய் என்று மற்றவர்கள் மமதை உணர்வில் கொண்டாட்டம் நடத்திடும் போது தீப்பந்தமென வெகுண்டெழுந்து அநீதிகளை சுட்டுப் பொசுக்குங்கள்! * முடங்கி விட்டாய் என்று மற்றவர்கள் பகையுணர்வில் பரிகசித்து அவமதித்திடும் போது வீறுகொண்ட புயலாய் புறப்பட்டு உங்கள் பலத்தை காட்டிடுங்கள்! - விஜயன் செல்வராஜ், கள்ளக்குறிச்சி.தொடர்புக்கு: 8248553326


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !