நடந்தது என்ன?
மார்ச் 24, 1733ல், ஆக்சிஜனை கண்டுபிடித்தவரும், சிரிக்கும் வாயுவை அறிமுகப்படுத்தியவருமான, ஜோசப் பீரிஸ்லி, பிறந்த நாள். * 1775ல், பிரபல கர்நாடக சங்கீத பிதாமகர், முத்துசாமி தீட்சிதர் பிறந்த நாள். * 1837ல், கனடாவில், கருப்பினத்தவர்கள், ஓட்டளிக்க அனுமதிக்கப்பட்டனர். * 1883ல், அமெரிக்காவின், நியூயார்க் - சிகாகோ இடையே முதல் டெலிபோன் பேச்சு துவங்கியது. * 1947ல், மவுண்ட் பேட்டன், பிரிட்டிஷ் இந்தியாவின் முதல் ஆளுநரானார். * 1963ல், மார்ட்டின் லுாதர் கிங் ஜுனியர், 'ஐ ஹாவ் ஏ டிரீம்' என்ற பிரபலமான உரையை நிகழ்த்தினார். * 1977ல், மொரார்ஜி தேசாய் - காங்கிரஸ் இல்லாத முதல் மத்திய அமைச்சரவையில், பிரதமர் ஆனார். * 2008ல், பூடான் அதிகாரபூர்வ குடியரசு நாடாக ஆனதுடன், முதல் தேர்தலையும் நடத்தியது. * 2017ல், சிங்கப்பூரில், 263 பேர், பேய் மாதிரி உடை அணிந்து, புதிய உலக சாதனை செய்தனர். * 2020ல், கோவிட்-19ஐ கட்டுப்படுத்த, இந்தியா, 21 நாள், 'லாக் டவுணை' அறிவித்து நடைமுறைப்படுத்தியது. * 1921ல், உலகின் முதல் சர்வதேச பெண்கள் ஒலிம்பிக், ஐந்து நாடுகள், 100 வீராங்கனைகள், பத்து வித்தியாசமான போட்டிகளில் கலந்து கொண்டனர். இது, ஐந்து நாள் நடந்தது. * உலக காசநோய் தினம்.