உள்ளூர் செய்திகள்

கவிதைச்சோலை - உலகை மாற்றுங்கள்!

வெற்றிகளின் பின்னால்ஒளிந்து கொள்வதை விடதோல்விகளின் முன்னால்துணிந்து சவால் விட்டுதோள் நிமிர்த்தி நில்லுங்கள்!ஆத்திரங்களின் பின்னால்அலைந்து திரிவதை விடசமாதானங்களின் கரம் பற்றிகுறை மறந்து மன்னித்துமா மனிதனாக நிமிருங்கள்!நடுநிலைமைகளின் பின்னால்பாதுகாப்பு தேடுவதை விடகோழைத்தனத்தை விலக்கிதீர்க்கமான முடிவை எடுத்துநியாயத்தைக் காப்பாற்றுங்கள்!சுயநலங்களின் பின்னால்மறைந்திட முயல்வதை விடமனிதநேயத்தின் மாண்புணர்ந்துதியாக உள்ளம் கொண்டுபொது நலத்திற்காக வாழுங்கள்!கர்வங்களின் பின்னால்வலம் வருவதை விடநட்புணர்வு ததும்பி நிற்கதோழமைகளின் முகம் தொட்டுஅன்பைப் பரிமாறுங்கள்!மோசடிகளின் பின்னால்பயணம் செல்வதை விடநேர்மையின் துணை நாடிஎல்லாரும் மகிழ்ந்திருக்கநல்லவற்றைச் செய்யுங்கள்!ஜாதி, மதங்களின் பின்னால்பெருமை பேசி சுற்றுவதை விடஒற்றுமையின் பலம் புரிந்துசமுதாயம் மேம்பட்டு விளங்கசமத்துவத்தைப் போற்றுங்கள்!வன்முறைகளின் பின்னால்சுகம் காண்பதை விடபெருங்கருணையின் பயனறிந்துதீங்கற்ற சிறந்த இடமாகஇவ்வுலகை மாற்றுங்கள்!— இந்திராணி ஆறுமுகம், புவனகிரி, கடலுார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !