உள்ளூர் செய்திகள்

கவிதைச்சோலை - வெற்றிச் சிகரத்தில்...

* பேசுவதற்கானபல கோடி வார்த்தைகள்உங்கள் உள்ளத்தில் இருக்கின்றன...ஆனால், அவற்றைதனக்குத் தானே பேசிக் கொண்டால்பார்ப்போர் சிரிப்பர் என்பதால்பேசிட விரும்பும்பிடித்தமான முகங்களுக்காககாத்திருந்து பேசுவதே சரி!* செய்து முடிப்பதற்கானபல்லாயிரம் செயல்கள்உங்கள் மனதில் இருக்கின்றன...ஆனால், அவற்றைதனக்காக மட்டுமே செய்து கொண்டால்உலகத்தார் சாடுவர் என்பதால்செய்திட எண்ணும்ஒவ்வொரு செயலையும்பொது நல உணர்வு கலந்துசெய்து கொண்டிருப்பதே சரி!* திறந்த மனதோடு மட்டுமேநம் வாழ்க்கை முழுவதும்நாம் பயணப்பட வேண்டும்...அவ்வாறு பயணப்படத் தயங்கினால்திரும்பிய திசைகளில் எல்லாம்மூடிய கதவுகளை மட்டுமேநாம் பார்த்து திகைக்க வேண்டியபரிதாப நிலைமை ஏற்பட்டு விடும்!* தனக்கான துறையை தேர்வதில்உங்களுக்குள்ள அகலாத ஆர்வம் தான் அடிப்படை...ஆனால், ஆர்வம் இருக்கிறதுஎன்ற ஒரு காரணத்தாலேயேயாருக்கும் திறமை வந்து விடாது!* ஆர்வம் என்பதுதினமும் ஆடை மாற்றுவதைப் போலமாறிக்கொண்டே இருக்கும்...ஆனால், திறமை அப்படி அல்ல;விடாமல் தொடர்ந்துபட்டை தீட்டிக் கொண்டே இருந்தால்வெற்றி சிகரத்தில் ஏற்றி வைக்கும்!— எஸ்.வி.ராஜசேகரன், மதுரை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !