கவிதைச்சோலை - அப்பா... அப்பா!
ஜூன் 16 - தந்தையர் தினம்அன்புள்ள அப்பாவுக்குஅன்றாட உழைப்பில்அங்காடி வாழ்க்கையில்என்னைப் பற்றியஆகாயக் கனவுகளில்மிதந்தவன் நீ!காட்டாற்று வெள்ளம் போல்யாருக்கும் கட்டுப்படாதமுரட்டு மனிதனாய் வாழ்ந்த நீ!நான் பிறந்தபோதுஎன் பிஞ்சு முகம் பார்த்துஇனி குடிப்பதில்லை என்றுசத்தியம் செய்தாய்!புகையிலை நாற்றம்பிறந்த குழந்தைக்கு ஆகாதென்றுபுகைப் பழக்கத்தையும்புதைத்து விட்டாய்!கடை வீதியில்மூட்டை சுமந்து உழைத்தாய்...வீட்டில் என்னைஉப்பு மூட்டை சுமந்து மகிழ்ந்தாய்!என்னை வளர்ப்பதற்காககஷ்டப்பட்டு கடன்பட்டுசுமை தாங்கியாய்வாழ்ந்து காட்டினாய்!கண்டிப்பு என்ற பெயரில்மீசை முறுக்கினாலும்ஆசையோடு அள்ளியெடுத்துமுத்தமிடும்போதுஉனக்கு நிகர்யாருமே இல்லை அப்பா!வகுப்பறையில்நான் செய்த தவறுக்காகதன்மானத்தை அடமானம் வைத்துநீ மன்னிப்பு கேட்டபோதுநெஞ்சம் உடைந்து செத்து விழுந்தேனப்பா!உன் பாசமும்சட்டையின் வியர்வை வாசமும்என்னைக் கட்டிப்போட்டுசெக்கு மாடாய்உன்னையே சுற்றி வரவழைத்தது!உன் தொள தொளசட்டையையும், செருப்பையும்மாட்டிக் கொண்டு - நான்நடந்து பார்த்த பொழுதுகள்இன்னும் நெஞ்சுக்குள்கவுரவமாய் நடை போடுகிறது!வேதனையை மென்று விழுங்கிஅமைதியை முகத்தில் சுமந்துஅன்பின் வடிவாய்பாசத்தின் உருவாய் வாழ்ந்தாய்!என்னைதோளில் சுமந்த உன்னைவசந்த நாற்காலியில்உட்கார வைக்கநான் நினைத்த பொழுதில்...உன் புகைப்படத்துக்குபூ மாலை சூட்டி, விளக்கும்ஏற்றப்பட்டு விட்டது அப்பா!இன்றும் - நீஎனக்காக வாழ்ந்துவிட்டுச் சென்றவாழ்க்கைச் சுவடுகள் தான்எனக்கு வழி காட்டியாகஇருக்கிறது அப்பா!— என். ஆசைத்தம்பி, ஆவடி, சென்னை.