அந்துமணி பதில்கள்!
சி.சவுமியா, தர்மபுரி: ஒருவேளை, 'தினமலர்' நாளிதழ் ஆரம்பிக்காமல் இருந்திருந்தால், எந்த வேலைக்குச் சென்றிருப்பீர்கள், அந்துமணி?துாத்துக்குடியில், உப்பளத்தில் உப்பை அள்ளிக் கொண்டிருப்பேன்!* வி.ஜெயந்தி, நங்கநல்லுார், சென்னை: உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால் வரை, அனைத்து அரசு பிரிவுகளிலும் பரவியிருக்கும் லஞ்சம், நம் நாட்டில் மட்டுமா அல்லது மற்ற நாடுகளிலுமா?அனைத்து நாடுகளிலும்!வெ.சென்னப்பன், நீலகிரி: அந்துமணிக்கு வரும் கேள்விகளில், ஒரு கேள்விக்கு பதில் அளிக்க, அந்துமணி எடுத்துக் கொள்ளும் நேரம் எவ்வளவு?எழுதத் தோன்றி விட்டால், ஐந்து நிமிடம்! வி.தேவசகாயம், சென்னை: அழகான பெண், உங்களை சந்திக்க வந்தால், உங்கள், 'ரியாக் ஷன்' எப்படி இருக்கும்?நம் அலுவலக முதன்மை மக்கள் தொடர்பு அதிகாரியை சந்திக்கச் சொல்லி விடுவேன்!* டி.ஜெயசிங், கோவை: நம் கருத்து பிடிக்காத கட்சித் தலைவரும், 'தினமலர்' நாளிதழை வாங்கிப் படிக்கத்தானே செய்வார்?ஆமாம்; எதிர் கருத்துகளை தெரிந்து வைத்து, அதற்கு பதில் சொல்லவும்; தன்னைப் பற்றி என்ன செய்தி வெளியாகி இருக்கிறது என, தெரிந்து கொள்ளவும்!டி.ஜூலியட், கோவை: பாசன கிணற்றில், 'பம்ப் செட்'டில் குளித்தது உண்டா?நெல்லை மாவட்டம், புதுக்குடி தோட்டத்தில், 10 குதிரைத் திறன் கொண்ட, 'பம்ப் செட்'டில் ஆனந்தமாக குளித்திருக்கிறேன், நண்பர்களுடன்!ம.வசந்தி, திண்டிவனம்: இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றால், ஒரு தொகுதியில் ராஜினாமா செய்ய வேண்டும் என்று தெரிந்தே போட்டியிட்டு, மக்களின் வரிப் பணத்தை வீணடிக்கும் சட்டத்தை, மாற்ற முடியாதா?தேர்தல் ஆணையம் மனது வைத்தால் செய்யலாம்!