உயரமாக வேண்டுமா... பால் உணவுகளை சாப்பிடுங்கள்!
உலகில், அதிக உயரமான மக்கள் டச்சு நாட்டைச் சேர்ந்தவர்கள் தான். 200 ஆண்டுகளுக்கு முன் வரை, அமெரிக்கர்களை விட, குள்ளமாக இருந்த இவர்கள், தற்போது உயரமாக வளர்ந்துள்ளனர். 'பசுவின் பால் அதிகமாக பயன்படுத்துவதே இவர்களது உயரத்துக்கு காரணம்...' என்று கூறியுள்ளனர் விஞ்ஞானிகள்.நெதர்லாந்தில், 16 லட்சம் பசுக்களும், ஏராளமான மாட்டுப் பண்ணைகளும் இருப்பதால், இங்கு பால் முக்கிய உணவாக உள்ளது. அத்துடன், உருளைக்கிழங்கு மற்றும் முட்டை கோஸ்களையும் அதிகமாக பயன்படுத்துகின்றனர்.இங்கு, அரசுக்கு சொந்தமான பெரிய பால் உற்பத்தி நிலையங்கள் இருந்தாலும் பலர், சொந்தமாகவும், பால் பண்ணைகள் வைத்துள்ளனர்.— ஜோல்னாபையன்.