உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / வங்கி மற்றும் நிதி / பணி நீக்கம், சொத்து விற்பனை: நஷ்டத்தால் பேடிஎம் முடிவு

பணி நீக்கம், சொத்து விற்பனை: நஷ்டத்தால் பேடிஎம் முடிவு

புதுடில்லி: அண்மைக் காலமாக 'பேடி எம்' நிறுவனம் தடுமாறிக்கொண்டிருக்கிறது. நடப்பாண்டு துவக்கத்தில் ரிசர்வ் வங்கி, 'பேடிஎம் பேங்க்' செயல்பாடுகளுக்கு விதித்த கட்டுப்பாடுகளுக்கு பின், இந்நிறுவனம் பல்வேறு சிக்கல்களை சந்தித்து வருகிறது. இந்நிலையில், இதன் தாய் நிறுவனமான 'ஒன் 97 கம்யூனிகேஷன்ஸ்' முதல் முறையாக, கடந்த மார்ச் காலாண்டில், அதன் வருவாயில் 2.60 சதவீத சரிவை கண்டுள்ளது. நிகர நஷ்டம் 550 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. வருவாய் 2,270 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. மேலும் இதே காலகட்டத்தில் 40 லட்சம் மாதாந்திர பயனாளர்களை இழந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இதையடுத்து, நிலைமையை சமாளித்து ஏற்றத்தை அடைய, வரும் நாட்களில் ஆட்குறைப்பு நடவடிக்கையில் இறங்க இருப்பதாகவும்; நிறுவனத்தின் சொத்துக்களை விற்பனை செய்யஉள்ளதாகவும் பேடிஎம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி