உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / வங்கி மற்றும் நிதி / ஆர்.பி.ஐ., ஹேக்கத்தான் விண்ணப்பங்கள் வரவேற்பு

ஆர்.பி.ஐ., ஹேக்கத்தான் விண்ணப்பங்கள் வரவேற்பு

மும்பை:ரிசர்வ் வங்கி நடத்தவுள்ள மூன்றாவது உலக ஹேக்கத்தான் போட்டிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 'ஹார்பிங்கர் 2024 - இன்னோவேஷன் பார் டிரான்ஸ்பர்மேஷன்' என்ற தலைப்பில் நடத்தப்பட உள்ள இந்த போட்டி, இரண்டு முக்கிய கருப்பொருட்களைக் கொண்டுள்ளது. நிதி மோசடிகள் அற்ற சூழலை உருவாக்குவது; மாற்றுத் திறனாளிகளுக்கு உதவுவது ஆகியவை நோக்கம்.பங்கேற்பதற்கு வரும் ஜூலை மாதம் 19ம் தேதி வரை, ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. வெற்றி பெறும் நபர் அல்லது குழுக்களுக்கு, 5 லட்சம் ரூபாய் முதல் 40 லட்சம் ரூபாய் வரை பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை