வாசகர்கள் கருத்துகள் ( 2 )
அடப்பாவிகளா இந்த சலுகையை அறிவிக்கவா, அத்தனை பொருளாதார நிபுணர்களையும் கூட்டி உட்காரவெச்சி, ஆலோசனை நடத்தினீங்க ? சரியா போச்சு போ.
பொதுவாகவே அரசின் பட்ஜெட் என்றால் என்ன? நிரந்தர செலவு, அவசிய செலவு, விட்டுப்போன செலவு ஆகியவை தான். அவசிய செலவுக்கு தான் பட்ஜெட்ல முக்கிய ஒதுக்கீடு இருக்கும். அது என்ன? அரசு துறை ஊழியரின்/MP/ MLA/ தலைமை முதல் கடைசி அமைச்சர் ஆகியோரின் சம்பளம், போனஸ், ஊதிய உயர்வு, ஓய்வூதியம், அகவிலைப்படி / சலுகை இப்படி. இது சுமார் எழுபது சதவிகிதம், பட்ஜெட் மொத்த நிதியில் ஆக்கிரமிப்பாக இருக்கும். முதலில் இந்த செலவு தான் தக்க வைப்பர். பிறகு தான் மற்றவை மிச்சம் மீதி. ஆனால், இதை எந்த ஆளும் / எதிர் கட்சியும் வெளியே சொல்லவே சொல்லாது. பட்ஜெட் உரையிலும் இந்த செலவினங்கள் அறிவிக்கவே படாது. ஆனால், மீதி மிச்சம் உள்ள திட்டங்கள், தனியார் நிறுவனங்களின்/ சேவை நிறுவனங்களின் /தனி நபர் வருமானம் மற்றும் சேமிப்பின் மீது வரி சுமை செலுத்தி, புரியாத வகையில் மணிக்கணக்கில் பட்ஜெட் உரை வாசிப்பர். கல்கண்டு, கம்மர்கட்டு, குச்சிமிட்டாய், குருவிரொட்டி போன்றவற்றிக்கு வரிவிலக்கு அளிப்பர். ஆனால், தனிநபர் வருமானம், சேமிப்பு, அத்தியாவசிய செலவினங்கள் போன்றவற்றின் மீது தான் கூடுதல் வரி சுமை விதிப்பர். இதில் மாட்டிக்கொள்பவர் தனியார் ஊழியர் மற்றும் ஏழை பாழய் தான். அரசு ஊழியருக்கு எப்போதுமே ஊதிய உயர்வு / பஞ்சபடியில் கூடுதல் / முன்தேதியிட்ட வருமானம் போன்ற ஜாக்பாட்டுகள் இருக்கும். அதாவது, ஏற்கனவே வாழ்க்கை நடத்தவே கஷ்டப்படும் தனியார் மற்றும் ஏழை பாழையிடம் எடுத்து, அரசுஊழியருக்கு வாரி வாரி வழங்கப்படும். இதை சுருக்கமாக பட்ஜெட் உரையில் குறிப்பிட முடியும். ஆனால், சுற்றி வளைத்து, மணிக்கணக்கில் பட்ஜெட் உரை, மற்ற துறைகளில் செலவுகள் / கடன்கள் மட்டுமே வாசிக்கப்படும். அதாவது, அரசின் மீதி சுமார் முப்பது சதவிகித வருவாய் மற்றும் செலவினங்கள் மட்டுமே வெளியிடுவர். ஒன்று கவனித்திருக்கிறீர்களா?? எப்போதுமே, அரசின் திட்டங்கள் வருடக்கணக்கில் நடைபெறும். கேட்டால் வருமான பற்றாக்குறை என்பார்கள். ஆனால், அரசு ஊழியருக்கு / அணைத்து அமைச்சர்கள் / MLA / MP க்களுக்கு வாரி வழங்குவதில், என்றைக்கேனும் பட்ஜெட்டில் துண்டு விழுந்து பார்த்திருக்கிறீர்களா? இந்த ஒட்டுமொத்த செலவை பட்ஜெட்டில் வாசித்து பார்த்திருக்கிறீர்களா? நஷ்டத்தில் இயங்கும் பொதுத்துறை / அரசுத்துறைக்கு எவ்வளவு பட்ஜெட்டில் வீணாக ஒதுக்குகிறார்கள் என்று அறிவித்து பார்த்திருக்கிறீர்களா? இதுதான் வறுமையை ஒழிக்கும் பட்ஜெட் என்று மார்தட்டுவர். எதிர்க்கட்சி ஆட்சிக்கு வந்தால் மட்டும் ? இதே காட்சி தான் அரங்கேறும். இக்கரைக்கு அக்கறை பச்சை. இதுதான் நமது ஜனநாயகம். உண்மையா ?? இல்லையா ??
மேலும் செய்திகள்
சர்வதேச சவாலை சந்திக்கும் மலைத்தோட்ட விளைபொருட்கள்
23 hour(s) ago
பாஸ்டேக் இல்லாமல் பயணம் யு.பி.ஐ.,க்கு சிறப்பு சலுகை
23 hour(s) ago
காஞ்சிபுரம் தொழில் பூங்காவில் பேட்டரி சோதனை மையம்
23 hour(s) ago
ட்ரோன் எதிர்ப்பு அமைப்பு வாங்க அரசு ஆர்டர்
23 hour(s) ago
அரிய கனிமங்கள் மறுசுழற்சி வழிகாட்டு நெறிமுறை வெளியீடு
23 hour(s) ago