உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / பெட்ரோல், டீசலுக்கு ஜி.எஸ்.டி., முயற்சிக்கும் மத்திய அரசு

பெட்ரோல், டீசலுக்கு ஜி.எஸ்.டி., முயற்சிக்கும் மத்திய அரசு

புதுடில்லி:பெட்ரோல், டீசல் மற்றும் விமான எரிபொருள் ஆகியவற்றை, ஜி.எஸ்.டி.,யின் கீழ் கொண்டு வர முயற்சிப்போம் என, மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப்சிங் பூரி தெரிவித்து உள்ளார்.ஜி.எஸ்.டி., வரம்புக்குள் வாகன எரிபொருட்களை கொண்டு வந்தால், அவற்றின் விலை குறைவதுடன், சாமானிய மக்களுக்கும் இது பயனளிக்கும் என்ற வகையில் அனைத்து கட்சிகளும் இதை வலியுறுத்தி வருகின்றன. ஆனால், வரி வருவாயில் மத்திய, மாநில அரசுகள் பாதிக்கப்படும் என்பதால், ஜி.எஸ்.டி., கவுன்சிலில் இவ்விவகாரத்தில் ஒருமித்த கருத்து ஏற்படவில்லை. இந்நிலையில், பெட்ரோல், டீசல் மற்றும் விமான எரிபொருட்களை ஜி.எஸ்.டி., வரம்புக்குள் கொண்டு வர முயற்சிக்கப்படும் என, மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப்சிங் பூரி தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை