உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பங்கு வர்த்தகம் / அலுவலக பணியமர்த்தல் கடந்த மாதம் 6% உயர்வு

அலுவலக பணியமர்த்தல் கடந்த மாதம் 6% உயர்வு

மும்பை:இந்தியாவில், 'ஒயிட்காலர்' பணி எனும் அலுவலக பணிகளுக்கான நியமனம், கடந்த மே மாதத்தில் அதிகரித்துள்ளதாக, 'நவுக்ரி ஜாப்ஸ்பீக் இன்டெக்ஸ்' அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அலுவலக பணிகளுக்கான நியமனம் கடந்த ஏப்ரல் மாதத்தை காட்டிலும், மே மாதத்தில் 6 சதவீதம் அதிகரித்துள்ளது.சுகாதாரம், பயணம் மற்றும் விருந்தோம்பல், எண்ணெய் மற்றும் எரிவாயு, வங்கி, எப்.எம்.சி.ஜி., போன்ற துறைகளில் தேவை அதிகரித்ததன் காரணமாக, இந்த உயர்வு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.எனினும், கடந்த ஆண்டு மே மாதத்துடன் ஒப்பிடுகையில், வேலை வாய்ப்பு 2 சதவீதம் சரிந்துள்ளது. கல்வி, தகவல் தொழில்நுட்பம், பி.பீ.ஓ., போன்ற துறைகளுக்கான வேலை வாய்ப்புகள் சரிவை கண்டுள்ளன.முக்கிய நகரங்களை விடவும், இரண்டாம் நிலை நகரங்களில் பணியமர்த்தல் அதிகரித்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், புதிதாக வேலைக்கு சேருபவர்களை காட்டிலும் அனுபவம் வாய்ந்த நபர்களுக்கான தேவை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை