உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / குருவாயூர் கோவில் யானைகளுக்கு 1 மாத புத்துணர்வு முகாம் துவக்கம்

குருவாயூர் கோவில் யானைகளுக்கு 1 மாத புத்துணர்வு முகாம் துவக்கம்

பாலக்காடு:கேரள மாநிலத்தில் புகழ்பெற்ற குருவாயூர் கிருஷ்ணர் கோவிலின், 38 யானைகளுக்கு ஒரு மாத புத்துணர்வு முகாம் நேற்று முன்தினம் துவங்கியது.கேரளாவில் ஆண்டுதோறும் ஜூலை மாதம் 'ஜீவதானம்' எனும் பெயரில், குருவாயூர் கோவிலின் 38 யானைகளுக்கு ஒரு மாத புத்துணர்வு முகாம் நடத்தப்படுகிறது. புன்னத்துார் கோட்டை பகவதி அம்மன் கோவில் வளாகத்தில், தேவஸ்தான நிர்வாகக் குழு தலைவர் விஜயன், இந்த ஆண்டுக்கான முகாமை நேற்று முன் தினம் துவக்கி வைத்து, யானைகளுக்கு மூலிகை உணவு வழங்கினார்.ஜீவதானம் சிறப்புக் குழு உறுப்பினர்கள், தேவஸ்தான நிர்வாகக் குழு உறுப்பினர்கள் மற்றும் தேவஸ்தான கால்நடை அதிகாரிகள் பங்கேற்றனர்.ஒரு மாதம் நடக்கும் இந்த முகாமில் அரிசி, பயறு, கொள்ளு, அஷ்டசூரணம், சவனப்பிராசம், மஞ்சள், உப்பு மற்றும் நவதானியங்கள் கலந்த உணவு வகைகள் யானைகளுக்கு வழங்கப்படும். இதற்காக, தேவஸ்தானம், 11 லட்சம் ரூபாய் ஒதுக்கி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ