உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பாலியல் தொல்லை வழக்கில் 3 கேரள நடிகர்கள் கைது..

பாலியல் தொல்லை வழக்கில் 3 கேரள நடிகர்கள் கைது..

திருவனந்தபுரம் : மலையாள திரையுலகில், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை புகாரில், பிரபல நடிகர்கள் ஜெயசூர்யா, மணியன்பிள்ளை ராஜு மற்றும் நடிகரும், ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ.,வுமான முகேஷ் உள்ளிட்டோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். முன்ஜாமின் மனு தாக்கல் செய்துள்ளதால், கைது நடவடிக்கையில் இருந்து ஐந்து நாட்களுக்கு முகேஷ் தப்பியுள்ளார்.மலையாள திரையுலகில், பெண்களுக்கு எதிராக நிகழும் பாலியல் குற்றங்கள் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி ஹேமா கமிட்டி அளித்த அறிக்கை சமீபத்தில் வெளியிடப்பட்டது.

சலசலப்பு

திரைப்பட வாய்ப்புகளுக்காக, பெண்கள் பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாக்கப்படுவதாகவும், பிரபல நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் அதில் தொடர்பு இருப்பதாகவும் அறிக்கையில் கூறப்பட்டு இருந்தது.இதையடுத்து, பல ஆண்டுகளுக்கு முன் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான நடிகையர், தாங்கள் அனுபவித்த கொடுமைகளை பொது வெளியில் வெளிப்படையாக பேச துவங்கினர். இது, கேரள சினிமாத்துறையில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.இந்த விவகாரம் தொடர்பாக விசாரிக்க, ஏழு பேர் அடங்கிய சிறப்பு விசாரணை குழுவை கேரள மாநில அரசு அமைத்துள்ளது. அக்குழுவினரை சந்தித்து பாதிக்கப்பட்ட பெண்கள் புகார்களை நேரடியாக தெரிவித்து வருகின்றனர்.மேற்கு வங்கத்தை சேர்ந்த நடிகை ஒருவர், மலையாள திரைப்பட இயக்குனர் ரஞ்சித், 2009ல் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் அளித்தார். அதேபோல, பிரபல நடிகர் சித்திக், எட்டு ஆண்டுகளுக்கு முன் ஒரு ஹோட்டலில், தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக மற்றொரு நடிகை புகார் அளித்தார். இதைத்தொடர்ந்து, இவர்கள் இருவர் மீதும் போலீசார் நேற்று முன்தினம் வழக்குப் பதிவு செய்தனர்.

ராஜினாமா

இதனால், மாநில அரசு நடத்தும் கேரள சலசித்ர அகாடமியின் தலைவர் பொறுப்பில் இருந்து இயக்குனர் ரஞ்சித்தும், 'அம்மா' என்றழைக்கப்படும், மலையாள திரைக்கலைஞர்கள் சங்கத்தின் பொதுச்செயலர் பதவியில் இருந்து சித்திக்கும் ராஜினாமா செய்தனர். நடிகர் மோகன்லால் தலைமையிலான கேரள சினிமா நடிகர் சங்க செயற்குழுவே கலைக்கப்பட்டு விட்டது.இந்த புகார்களின் தொடர்ச்சியாக, பல்வேறு மலையாள படங்களில் நடித்துள்ள நடிகை ஒருவர், தன் சமூகவலைதளத்தில் வெளியிட்ட பதிவு ஒன்று அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதில், '2013ல், திரைப்படம் ஒன்றில் பணியாற்றிக் கொண்டிருந்த போது, பிரபல நடிகர்கள் முகேஷ், ஜெயசூர்யா, மணியன்பிள்ளை ராஜு, இடவேளா பாபு, வழக்கறிஞர் சந்திரசேகரன், தயாரிப்பு நிர்வாகிகள் நோபல் மற்றும் விச்சு ஆகியோரால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானேன்' என்று குறிப்பிட்டிருந்தார்.

3 பிரிவுகளில் வழக்கு

அவர்கள் அளித்த துன்புறுத்தல்களை பொறுத்துக் கொண்டு, அந்த படத்தில் பணியாற்றியதாகவும், ஒரு கட்டத்தில் அவர்களது வன்கொடுமை பொறுக்க முடியாத அளவுக்கு சென்றதாகவும் குறிப்பிட்டு உள்ளார். இதில், நடிகர் முகேஷ், கேரளாவில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.எல்.ஏ.,வாக தற்போது பதவி வகித்து வருகிறார்.எர்ணாகுளத்தின் மாராடு போலீஸ் ஸ்டேஷனில், முகேஷுக்கு எதிராக பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்தார். அதை பெற்றுக்கொண்ட போலீசார், பாலியல் வன்கொடுமை உட்பட ஜாமினில் வெளிவர முடியாத மூன்று பிரிவுகளில் முகேஷ் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனால், கலக்கம் அடைந்த முகேஷ், எர்ணாகுளம் முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில், நேற்று முன்ஜாமின் மனு தாக்கல் செய்தார். அதில், புகார் அளித்துள்ள பெண், தன்னை மிரட்டி பணம் பறிக்க முயன்றதாகவும், தனக்கு சாதகமாக பல காரணிகள் இருப்பதாகவும், அந்த பெண்ணின் ஒற்றை வாக்குமூலத்தின் அடிப்படையில், போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 'முகேஷின் முன்ஜாமின் மனு செப்., 5ல் விசாரிக்கப்படும்' என, தெரிவித்த நீதிபதிகள் அதுவரை அவரை கைது செய்ய இடைக்கால தடை விதித்தனர். இதனால், கைது நடவடிக்கையில் இருந்து எம்.எல்.ஏ., முகேஷ் தற்காலிகமாக தப்பியுள்ளார்.இவரை தவிர, நடிகர்கள் ஜெயசூர்யா, மணியன்பிள்ள ராஜு உள்ளிட்டோர் மீதும், பாலியல் பலாத்கார வழக்கு நேற்று பதிவு செய்யப்பட்டுள்ளது.மார்க்சிஸ்ட் கம்யூ., - எம்.எல்.ஏ., முகேஷ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது அரசியல் களத்தில் அனலை கிளப்பி உள்ளது. ''குற்றம் சுமத்தப்பட்டுள்ள முகேஷ், தார்மீக பொறுப்பேற்று எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்,'' என, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த ஆனி ராஜா தெரிவித்தார்.இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூ.,வை சேர்ந்த அமைச்சர்கள் கே.என்.பாலகோபால், ஏ.கே.சசீந்திரன் அளித்த பதில்:நீதிபதி ஹேமா கமிட்டி அறிக்கை உயர் நீதிமன்றம் முன் உள்ளது. முறையான, வெளிப்படையான விசாரணை நடத்தப்பட்டு அதன் முடிவின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும். எனவே, எந்தவித முன்முடிவுக்கும் இப்போதே செல்லவேண்டிய அவசியம் இல்லை.முகேஷ் குற்றமற்றவர் என்பதை நிரூபிக்க, அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். புகார் அளித்த பெண்ணும் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை சமர்ப்பிக்க வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும். அதன் அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்கப்படும். பதவியை ராஜினாமா செய்வதா, வேண்டாமா என்பது முகேஷின் தனிப்பட்ட விருப்பம்.இவ்வாறு அவர்கள் கூறினார்.''முகேஷ் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அவர் பதவியில் தொடர முடியாது,'' என, மார்க்சிஸ்ட் கம்யூ., எம்.எல்.ஏ., கே.கே.ஷைலஜா தெரிவித்தார்.இந்நிலையில் திருச்சூர் விருந்தினர் மாளிகையில் இருந்து வெளியே செல்ல முயன்ற தன்னை வழிமறித்ததாக, பத்திரிகையாளர்கள் மீது மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி, அங்குள்ள போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். இதையடுத்து, அவர்கள் மீது அத்துமீறுதல், அரசு பணியாளரை பணி செய்யவிடாமல் தடுத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ், போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

Anbuselvan
ஆக 30, 2024 20:33

என்னே இருந்தாலும் மலையாள சினிமா உலகில் ஆண் பெண் இரு பலருக்கும் சம மதிப்பு இருக்கிறது. இதே மீ2 தமிழ் சினிமாவில் இல்லை என கூற முடியாது. அரசியல் தலையீடு காரணமாக சில சினிமா பிரபலங்கள் இன்னமும் வெளியே உள்ளார்கள். என்றாவது இங்கேயும் வெடிக்கும் அப்போ அவரும் அவரை போன்ற பலரும் உள்ளே போவது நிச்சயம். இங்கேருந்து வருகிற காசு அங்கிருந்து வந்தால் என்ன வாங்க கசக்குமா.


SUBRAMANIAN P
ஆக 30, 2024 14:02

சினிமாத்துறையில எவனுமே எவளுமே யோக்யம் இல்ல. அந்த துறையே ஒரு கூவம்.. என்னிக்கோ, எப்பவோ எதோ ஒரு சந்தர்பத்துலயாவது கழுதை கேவலமா தான் நடந்து இருக்கும்.


Ram pollachi
ஆக 30, 2024 13:14

நடிகைகளால் பலர் குடும்பம், சொத்துக்களை இழந்தது வெளியே தெரியாது, வராது... படப்பிடிப்பில் ஆடையை குறைக்க குறைக்க பணம் அதிகரிக்கும்... மற்ற இடங்களில்.... மொத்தமாக அள்ளலாம். நம்மிடம் இருப்பது தான் அவர்களிடமும் இருக்கிறது என்பதை உணராத வரை .... யார் எல்லாம் பத்ம விருதுகள் வாங்கி உள்ளார்கள்? ஸ்மெயில் ப்லீஸ்.....


கத்தரிக்காய் வியாபாரி
ஆக 30, 2024 12:36

மோகன்லாலை பிடித்து பிதிக்கினால் உண்மை வரும்..அனால் யார் அதை செய்ய முடியும்.


Kanns
ஆக 30, 2024 09:20

Most of Complainants are Vested, False & Cookedup for Wrecking Vengeance, Extracting Big-Shortcut Money & CineChances or Posts. BUT AntiSocial CrlCase-Hungry Criminals Will Never Punish Any False Complainant Gangs-SHAME on our JUSTICE


AMLA ASOKAN
ஆக 30, 2024 08:32

காசுக்கு ஆசைப்படாத எந்த ஒரு பெற்றோரும் தன் மகள் நடிகையாக வேண்டும் என்பதை கண்டிப்பாக விரும்ப மாட்டார்கள் . எந்த ஒரு இளம் பெண் கல்லூரியில் சேர்ந்து பட்டம் பெற்று ஒரு நல்ல பணியில் சேர்ந்து தன் சொந்த காலில் நின்று சம்பாதிக்கிறாளோ அல்லது தனது திருமண வாழ்வில் ஒரு நல்ல மனைவியாக , நல்ல தாயாக வளம் வருகிறாளோ அவள் தான் சாதனையாளர் . மாறாக படிப்பில் ஆர்வில்லாமல் கல்லூரிக்கு செல்வதற்கு பதிலாக தனது 20ஆவதில் தன் கவர்ச்சியான உடல் அழகை மூலதனம் வைத்து சினிமா தொழிலில் தன் மானம் கூச்சம் எல்லாவற்றையும் குப்பையில் தூக்கிப் போட்டுவிட்டு சென்ற இவர்களை நடிக்கச் சொன்னது யார் ? இன்றைய இந்த உத்தமியை யார் சினிமாவில் சேர்ந்து கற்பிழக்கச் சொன்னார்கள் . தனக்கு வாய்ப்பில்லை என்றதும் கற்பழிக்கப்பட்டேன் என்று ஊளையிடுவது மகா அயோக்கியத்தனம் . உயர்ந்த நிலையில் உள்ள பிரபலமான நடிகை யாரவது புகார் சொல்லியுள்ளார்களா ? வாய்ப்பிழந்த நடிப்பில் எடுபடாத ஆதரவற்ற இந்த குட்டி நடிகைகள் தான் கூக்குரலிடுபவர்கள் . இவர்களுக்கு இனி வேறு எந்த வேலையும் கிடைக்காது . திருமணம் ஆவதும் சிரமமே . சட்டி சுட்டதடா கை விட்டதடா தினமும் மனமுடைந்து ஆழ்ந்த துன்பத்தில் இருக்கும் இவர்களின் பெற்றோர்களுக்கு தான் நமது அனுதாபங்களை தெரிவிக்க வேண்டும் .


ஆரூர் ரங்
ஆக 30, 2024 09:38

அந்தக் காலத்திலேயே வசதியான குடும்பத்துப் பெண்களும் நடிக்க வருகிறார்கள்.. ஆனால் ஈர வெங்காயம் யார் யாருடன் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என்று வழி காட்டி விட்டாரே.


RAMKUMAR
ஆக 30, 2024 07:44

தலைவருக்கு, புது படம் தயாரிப்பாளர் வேணும் . ரெட் ஜெயண்ட் கிட்ட அப்பிளிகேஷன் போட்டுட்டாரு . ப்ளீஸ் வெயிட். ரெட் ஜெயண்ட் movies - சூப்பர் ஸ்டார்ட் ரஜினிகாந்த்னு புது படம் வரும் . சூப்பர் marketing ...


sankaranarayanan
ஆக 30, 2024 07:02

சினிமாவில் நடிக்க வந்த பிறகு இது போன்ற புகார்களை அவர்கள் எழுப்புவதே சரி அல்ல அங்கே ஒருவருக்கொருவர் கட்டி தழுவி முத்தமிடும் காட்சிகள் எல்லாமே அரங்கேரும் எல்லாவற்றிற்கும் சம்மத்தித்துதானே இவர் சிமாவில் நடிக்க நுழைந்தார்கள் பிறகு தங்களுக்கு உரிய பாத்திரம் அல்லது நடிக்க வாய்ப்பு தரவில்லை என்றால் உடனே அவர்களைப்பற்றி புகார் அழிப்பது சினிமா தொழிலுக்கே சரி அல்ல இனி சினிமா தொழிலே இவர்களால் நசித்துவிடும்


Kasimani Baskaran
ஆக 30, 2024 06:03

அழகான பெண்களுக்கு ஆபத்து பல வகைகளில் உண்டு. சினிமாவும் அதில் ஒன்று. குறிப்பாக கட்டிப்பிடித்து நெருக்கமாக நடிக்கும் சந்தர்ப்பம் வரும் பொழுது 100% யோக்கியர்களாக இருக்க மிக மிக வாய்ப்பு குறைவு. தமிழகத்தில் இதே பிரச்சினை உண்டு. ஓரிருவர் வெளியே சொல்லியிருக்கிறார்கள். அவர்களின் பெயர் கெட்டாதே தவிர நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர் போன்றோர் யோக்கிய வேசமே போட்டுத்திரிகிறார்கள். ஸ்ரீரெட்டி போன்ற ஒரு சிலரே இதை பிரச்சினையாக பேசினார்கள், போராட முயன்றார்கள் - ஆனால் பலர் அடுத்து நடிக்க வாய்ப்பு கிடைக்காது என்பதால் இதில் முனைப்பு காட்டவே இல்லை. எந்த வாய்ப்பும் கிடைக்காமல் ஸ்ரீரெட்டி போன்ற பலர் இன்று நலிவுற்று இருக்கிறார்கள். பணம் புகழ் தவிர பல நடிகைகளில் வாழ்வு சோகமானது என்றே சொல்லவேண்டும்.


தாமரை மலர்கிறது
ஆக 30, 2024 01:11

வாய்ப்பிற்காக தூண்டில் போடுவதே நடிகைகள் தான். எப்பேர்ப்பட்ட பெரிய நடிகர், இயக்குனர் மடிஞ்சிட்டார் என்னுகிட்ட என்று அதை பற்றி பெருமையாக பேசுபவர்களும் அவர்கள் தான். அனகோண்டா என்று மலைப்பார்கள். பிறகு ஒன்னும் தெரியாத பாப்பா போட்டாளாம் தாப்பா என்று அதே ஆண்கள் மீது குறை சொல்லி பெண்பாவம் தேடுகிறார்கள். மீ டூ என்பதே எனக்கும் வாய்ப்பு கொடு என்பதே பொருள்.


புதிய வீடியோ