மத்திய அரசின் உயர் பதவிகளுக்கு நேரடியாக அதிகாரிகளை நியமிக்கும் முடிவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி, ஆளும் கூட்டணியில் உள்ள தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர்.இதைதொடர்ந்து, நியமனம் தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள விளம்பரத்தை ரத்து செய்யும்படி, யு.பி.எஸ்.சி., தலைவருக்கு மத்திய அரசு உத்தரவிட்டது. இதையடுத்து அந்த விளம்பரம் ரத்து செய்யப்பட்டது.மத்திய அரசின் 24 அமைச்சகங்களுக்கான இணை செயலர், இயக்குனர்கள், துணை செயலர்கள் உட்பட 45 பதவிகளுக்கான பணி நியமனங்களை நேரடியாக நடத்த மத்திய அரசு முடிவு செய்தது. இதற்கான பத்திரிகை விளம்பரம், கடந்த 17ம் தேதி வெளியானது. எதிர்ப்பு
பொதுவாக இந்த பணிகளில் ஐ.ஏ.எஸ்., தேர்ச்சி பெற்ற அதிகாரிகள் அல்லது குரூப் - ஏ தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே நியமிக்கப்படுவது வழக்கம். மாறாக, மாநில அரசு, பொதுத்துறை நிறுவனங்கள், தனியார் நிறுவனங்களில் பணியாற்றி அனுபவம் வாய்ந்த நிபுணர்களை நேரடி பணி நியமனம் செய்யும் இந்த நடைமுறைக்கு, கடும் எதிர்ப்பு கிளம்பியது.எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி, தே.ஜ., கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஐக்கிய ஜனதா தளம், லோக் ஜனசக்தி கட்சி தலைவர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். கடிதம்
லோக் ஜனசக்தி ராம்விலாஸ் பஸ்வான் கட்சி தலைவரும், மத்திய அமைச்சருமான சிராக் பஸ்வான், 'அனைத்து அரசு பணி நியமனங்களும் இடஒதுக்கீட்டு நடைமுறையின்படி தான் நடக்க வேண்டும்' என, தெரிவித்தார்.இதையடுத்து, யு.பி.எஸ்.சி., எனப்படும், மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் ப்ரீத்தி சுதனுக்கு, மத்திய பணியாளர் நலத்துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் நேற்று எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:மத்திய அரசின் இணை செயலர், இயக்குனர்கள் மற்றும் துணை செயலர்கள் பதவிகளுக்கு, நேரடி நியமனம் செய்வது தொடர்பாக விண்ணப்பங்களை வரவேற்று யு.பி.எஸ்.சி., சமீபத்தில் விளம்பரம் செய்திருந்தது. இந்த நேரடி நியமன நடைமுறை என்பது, 2005ல் வீரப்ப மொய்லி தலைமையில் அமைக்கப்பட்ட இந்திய ஆட்சிப்பணி சீரமைப்புக் குழுவால் ஒப்புக்கொள்ளப்பட்டு மத்திய அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டது.மேலும், 2013ல் அமைக்கப்பட்ட ஆறாவது தொடர்ச்சி 14ம் பக்கம்சதியை முறியடிப்போம்எதிர்க்கட்சிகளின் கள்ள மவுனம்
லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் நேற்று வெளியிட்ட சமூக வலைதள பதிவு:
அரசியலமைப்பு சட்டத்தையும், இட ஒதுக்கீட்டு முறையையும் எப்பாடு பட்டாவது பாதுகாப்போம். நேரடி பணி நியமனம் உள்ளிட்ட பா.ஜ.,வின் சதி திட்டங்களை முறியடிப்போம். 50 சதவீத இடஒதுக்கீடு உச்சவரம்பை நீக்கி, ஜாதிவாரி கணக்கெடுப்பின் அடிப்படையில் சமூக நீதியை உறுதி செய்வோம்.இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.
லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் நேற்று வெளியிட்ட சமூக வலைதள பதிவு:
அரசியலமைப்பு சட்டத்தையும், இட ஒதுக்கீட்டு முறையையும் எப்பாடு பட்டாவது பாதுகாப்போம். நேரடி பணி நியமனம் உள்ளிட்ட பா.ஜ.,வின் சதி திட்டங்களை முறியடிப்போம். 50 சதவீத இடஒதுக்கீடு உச்சவரம்பை நீக்கி, ஜாதிவாரி கணக்கெடுப்பின் அடிப்படையில் சமூக நீதியை உறுதி செய்வோம்.இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.நேரடி பணி நியமன அறிவிப்பை திரும்பப் பெற்ற பிரதமருக்கு நன்றி. இந்த அரசு முன்னுதாரணமாக திகழ்கிறது. எதிர்காலத்திலும் மக்களின் உணர்வுகளுக்கு இதே போல மதிப்பளிக்கும் என நம்புகிறேன். இப்போது எங்கள் மீது குற்றம் சுமத்தும் எதிர்க்கட்சிகள், ஆட்சியில் இருந்தபோது எஸ்.சி., - எஸ்.டி., - ஓ.பி.சி.,க்களுக்கான இட ஒதுக்கீட்டை உறுதி செய்யாதது ஏன்?இவர்கள் எப்போதுமே சில விஷயங்களுக்கு மட்டுமே வாய் திறக்கின்றனர். மேற்கு வங்கத்தில் பயிற்சி பெண் டாக்டர் படுகொலை விவகாரத்தில் மட்டும் இவர்கள் மவுனம் காப்பது ஏன்?-- சிராக் பஸ்வான் மத்திய அமைச்சர், லோக் ஜனசக்தி- நமது டில்லி நிருபர் -