உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஹிந்துத்வா குறித்து ராகுல் பேச்சு பெஜாவர் மடாதிபதி கண்டனம்

ஹிந்துத்வா குறித்து ராகுல் பேச்சு பெஜாவர் மடாதிபதி கண்டனம்

தாவணகெரே : ''ஹிந்துத்வா குறித்து, லோக்சபாவில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் பேசியதை, நான் கண்டிக்கிறேன். ஹிந்துக்கள் வன்முறையாளர்கள் என, கூறியது சரியல்ல,'' என, உடுப்பியின் பெஜாவர் மடத்தின் மடாதிபதி விஸ்வ பிரசன்ன தீர்த்த சுவாமிகள் தெரிவித்தார்.தாவணகெரேவில் நேற்று அவர் அளித்த பேட்டி:சுவாமிகள் அரசியல் பேசக்கூடாது என்பது சரியல்ல. மடாதிபதிகளும் கூட ஓட்டுப் போடுகின்றனர். என்னை பொறுத்தவரை அவர்கள் அரசியல் பேசுவது தவறு அல்ல.ஹிந்துத்வா குறித்து, லோக்சபாவில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் பேசியதை நான் கண்டிக்கிறேன். 'ஹிந்துக்கள் பகைமை கொள்வர், வன்முறையாளர்கள்' என, கூறியுள்ளார். அப்படி என்றால் நமக்கு நீதிமன்றங்கள் தேவையில்லையா? பொறுப்பான பதவியில் இருப்பவர், இது போன்று பேசக்கூடாது. இது உணர்வுகளை துாண்டும் பேச்சாகும்.வேறு யாராவது பேசியிருந்தால், நடவடிக்கை எடுத்திருப்பர். ஆனால் ராகுல் பேசியதால், நடவடிக்கை எடுக்கவில்லை. இரண்டு சமுதாயங்களுக்கு இடையே, விஷ விதையை விதைக்கக் கூடாது. மணிப்பூரில் நடந்த சம்பவத்தை யாராலும் மறக்க முடியாது.இவ்வாறு அவர்கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Swaminathan L
ஜூலை 11, 2024 16:20

ராகுல் காந்தியின் சிக்கலே எண்ணியதைச் சொல்லும்போது சரியான சொற்களைத் தேர்ந்தெடுத்துச் சொல்லாதது தான். பாஜக மட்டுமே ஒட்டு மொத்த இந்துக்களின் அரசியல் பிரதிநிதி அல்ல. பாஜகவினர் பாஜக தொண்டர்கள், பாஜகவுக்கு எப்போதும் ஓட்டுப் போடுபவர்கள் அஹிம்சையாளர்கள் அல்ல, அவர்கள் வெறுப்பு, வன்முறையைத் தூண்டுபவர்கள் என்று சொல்ல வந்து, வழக்கம்போல சொதப்பி பாஜக இந்துக்கள் வன்முறையாளர்கள் என்று பேசி விட்டார். தன்னையும், தன் திறனையும், தன் அரசியல் இருப்பையும் சரியாக எடை போடத் தெரியாமல் அணுக்கர்களின் அசைவுக்கு ஆடுபவர்.


மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ