உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / விவசாயிகளின் வருவாய் அதிகரிக்கும்

விவசாயிகளின் வருவாய் அதிகரிக்கும்

வெங்காயம் மற்றும் பாசுமதி அரிசிக்கான ஏற்றுமதி கட்டுப்பாடுகளை தளர்த்தியது, விவசாயிகளின் வருவாயையும்; ஊரகப் பகுதிகளில் வேலை வாய்ப்புகளையும் அதிகரிக்கும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தன் சமூக வலைதள பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது:வெங்காயத்தின் மீதான ஏற்றுமதி வரியை குறைத்ததாக இருந்தாலும் சரி; சமையல் எண்ணெய் மீதான இறக்குமதி வரியை உயர்த்தியதாக இருந்தாலும் சரி. இந்த முடிவுகள் அனைத்துமே விவசாயிகளுக்கு நன்மை பயக்கக் கூடும். இந்த முடிவுகள் அவர்களின் வருவாயை அதிகரிப்பதுடன் மட்டுமல்லாமல், ஊரகப் பகுதிகளில் வேலை வாய்ப்புகளையும் அதிகரிக்கும். இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

'விவசாயிகள் வருவாய் பெருகும்'


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை