உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சாதனைகளை சீர்குலைக்கும் முயற்சி தீர்ப்பில் நீதிபதி தத்தா விளாசல்

சாதனைகளை சீர்குலைக்கும் முயற்சி தீர்ப்பில் நீதிபதி தத்தா விளாசல்

புதுடில்லி, ''நம் தேசத்தின் வெற்றிகள் மற்றும் சாதனைகளை திட்டமிட்டு சீர்குலைக்கும் முயற்சிகளில், சில குழுக்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன,'' என, ஓட்டு இயந்திரம் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்ற நீதிபதி தீபங்கர் தத்தா அளித்த தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.ஓட்டுப்பதிவு இயந்திரத்தின் நம்பகத்தன்மை குறித்து, சந்தேகம் எழுப்பி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீது, உச்ச நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. மனுக்களை விசாரித்த நீதிபதிகளில் ஒருவரான தீபங்கர் தத்தா, தன் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளதாவது:கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பின் காரணமாக, சமீப காலங்களில் நம் தேசம் மிகப் பெரிய சாதனைகளை செய்து வருகிறது. அதை சிதைப்பதற்கென்றே சில குழுக்கள், சமீப காலமாக திட்டமிட்டு செயல்படுகின்றன.நாட்டின் வளர்ச்சியை இழிவுபடுத்தி பலவீனமாக்கும் முயற்சியை, நாம் முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும். இதுபோன்ற முயற்சிகளை இந்த நீதிமன்றம் அனுமதிக்காது. மின்னணு ஓட்டுப்பதிவையும் தாண்டி, அடுத்த கட்ட தொழில்நுட்பத்தை தான் மக்கள் விரும்புவரே தவிர, மீண்டும் ஓட்டு சீட்டு முறைக்கு செல்வதை ஆதரிக்க மாட்டர். இந்த விவகாரத்தில் மனுதாரர்களின் நேர்மை மீதே எனக்கு சந்தேகம் உள்ளது.எனவே தான், மனுதாரர்களுக்கு நல்ல நோக்கம் இல்லை என்ற தேர்தல் கமிஷனின் வாதத்தை நாங்கள் ஏற்றுக்கொண்டோம். மின்னணு ஓட்டு முறை மீது மக்களுக்கு சந்தேகத்தை கிளப்பி, தேர்தல் நடைமுறையை சீர்குலைப்பதே, மனுதாரரின் நோக்கமாக உள்ளது. மீண்டும் ஓட்டு சீட்டு முறையை அறிமுகப்படுத்துவதற்கு நீதிமன்றம் ஆதரவு அளிக்காது. சந்தேகம் மற்றும் யூகத்தின் அடிப்படையிலான மனுக்களை, இந்த நீதிமன்றம் ஊக்குவிக்காது. இவ்வாறு தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுஉள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

Subash BV
ஏப் 27, 2024 18:42

CONGRESS NOT BOTHERED TO WASTE PUBLIC MONEY REASON WHY NATION NOT DEVLOPED DURING THEIR PERIOD THEY ARE THE GUYS WHO WANTS BALLOT PAPERS SYSTEM, WHICH CONSUME MORE COST COMPARED TO EVM PUT THE BHARAT FIRST


Subramaniam Mathivanan
ஏப் 27, 2024 14:50

ஊழல்வாதிகளுக்கு மேல்முறையீட்டில் உச்ச நீதி மன்றம் இடைக்கால தடை கொடுத்தாலும், அவர்கள் வழக்கு முடிவுக்கு வரும் வரை எந்த வித அரசு காரியங்களிலும் ஈடுபடக் கூடாது


R Kay
ஏப் 27, 2024 13:55

Very well said


ஆரூர் ரங்
ஏப் 27, 2024 10:40

உங்களுக்கு கொலீஜியத்தில் இடம் கிடைப்பது கஷ்டம். பிழைக்கத் தெரியாத மனிதர்.


N.Purushothaman
ஏப் 27, 2024 09:53

அவர்களுக்கு எல்லாமே சந்தேகம் தான் எதிர்மறை சிந்தனைகள் தான்


R.Hariharasubramanian
ஏப் 27, 2024 08:14

அடுத்த முன்னேற்றமான நிகழ்வு என்னவாக இருக்க வேண்டும் என்றால், வீட்டிலிருந்தே இணையவழியில் வாக்கு செலுத்த வழி ஏற்பட வேண்டும் தேர்தல் நாளில் அத்தகைய வழி ஏற்பட்டுவிட்டால் வாக்குகள் செலுத்தும் அளவும் மிகவும் அதிகரிக்கும் வாக்குச்சாவடிகளில் சென்று ஓட்டு செலுத்துவோரும் அனுமதிக்கப்பட வேண்டும் உலகில் மென்பொருள் புரட்சி செய்யும்


குமரி குருவி
ஏப் 27, 2024 07:13

இந்தியாவை சீர்க்குலைக்க வளர்ச்சியை தடுக்க பல குழுக்கள் இந்தியர்களாக செயல்படுவதை இந்த தீர்ப்பு சுட்டி காட்டி விட்டது


Varadarajan Nagarajan
ஏப் 27, 2024 07:11

உலகில் பல நாடுகள் செய்யாத பல சாதனைகளை நம் நாடு செய்துள்ளது உதாரணமாக விண்வெளி ஆராய்ச்சி, டிஜிட்டல் பெமென்ட் முறை போன்றவற்றை சொல்லலாம் அதுபோல் மின்னணு வாக்கு முறையும் ஒன்று வாக்குசீட்டுகள் இருந்தபோது வாக்களித்தபிறகு அதை எப்படி மடிக்கவேண்டும் என தெரியாமல் நிறைய வாக்குகள் செல்லாததாக அறிவிக்கப்பட்டது தற்பொழுது அது முற்றிலுமாக இல்லை சாதனைகளை சீர்குலைக்கும் நோக்கம் என்ற நீதிபதியின் கருத்து மிகவும் சரியே வந்தே பாரத் ரயில் ஓட்டம் ஆரம்பித்தபொழுது அதன்மீது கல்யெறிந்தார்கள் கொரோனா தடுப்பொசிகள் நம் நாட்டில் தயாரித்தபொழுதும் பிரதமர் ஏன் போட்டுக்கொள்ளவில்லை என்றும் அதன் நம்பகத்தன்மை குறித்தும் இழிவாக பேசியும் வதந்தி பரப்பினார்கள் எனவே இவை முளையிலேயே கிள்ளி ஏறியப்படவேண்டுமேயென்ற நீதிபதியின் கருத்து மிகவும் வரவேற்கப்படவேண்டியது என்பதில் மாற்றுக்கருத்து கிடையாது


Karthikeyan
ஏப் 28, 2024 08:13

மிக மிக சரியாக சொன்னீங்க சார் நம் நாடு முன்னேறக்கூடாது என்று செயல்படும் அந்நிய தீயசக்திகளின் கைக்கூலிகள்தான் இந்த கேவலமான வழக்கினை தாக்கல் செய்திருக்கிறார்கள் அவர்களுக்கு நீதியரசர் தத்தா அவர்களின் தீர்ப்பு ஒரு சாவு மணியாகும்


Kasimani Baskaran
ஏப் 27, 2024 06:24

ஒரு ரூபாய் பிரசாந்த் பூசனுக்கு இதெல்லாம் புரியும் விசயங்கள் அல்ல மைக்ரோ கண்ட்ரோலர், மெமரி போன்ற சிலை வார்த்தைகளை அறிந்து கொண்டு நீதிமன்றத்தில் போய் உருட்டுவது ஆபத்தானது


Duruvesan
ஏப் 27, 2024 05:45

ஆக கோர்ட் கூட சங்கிகளின் கூடாறம் என விடியல் கூவும்


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை