உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சிறப்பு நீதிமன்றங்கள் தேவையா: மதிப்பீடு செய்ய முடிவு

சிறப்பு நீதிமன்றங்கள் தேவையா: மதிப்பீடு செய்ய முடிவு

புதுடில்லி : எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் மீதான குற்றவியல் வழக்குகளை விரைவாக விசாரிக்க அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றங்களின் செயல்பாடு, செயல்திறன் மற்றும் ஒட்டு மொத்த தாக்கம் குறித்து விரிவான மதிப்பீடு செய்வற்கான பரிந்துரைகளை அளிக்கும்படி, ஐ.ஐ.எம்., - ஐ.ஐ.டி., மற்றும் சட்ட பல்கலைகள், நீதித்துறை சார்ந்த உயர் கல்வி நிறுவனங்களுக்கு மத்திய சட்ட அமைச்சகம் அழைப்பு விடுத்து உள்ளது.கண்காணிப்புஎம்.பி., -- எம்.எல்.ஏ.,க்கள் மீதான குற்ற வழக்குகளை விரைவாக விசாரிக்க, சிறப்பு நீதிமன்றத்தை அமைக்கும்படி உச்ச நீதிமன்றம் 2017ல் உத்தரவிட்டது. இதை தொடர்ந்து நாடு முழுதும், 12 சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டன.டில்லியில் இரண்டு, உத்தர பிரதேசம், பீஹார், மேற்கு வங்கம், மத்திய பிரதேசம், மஹாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, தமிழகம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் தலா ஒரு சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டன.இந்த சிறப்பு நீதிமன்றங்களின் செயல்பாடுகளை கண்காணித்து வரும் உச்ச நீதிமன்றம், பீஹார் மற்றும் கேரளாவில் உள்ள நீதிமன்றங்களின் செயல்பாடுகளை நிறுத்தும்படி 2018ல் உத்தரவிட்டது. செயல்திறன்உ.பி.,யில் உள்ள நீதிமன்றத்தில், 50 வழக்குகளில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளன; 1,137 வழக்குகள் நிலுவையில் உள்ளன. ம.பி., நீதிமன்றத்தில் ஐந்து வழக்குகள் தீர்த்து வைக்கப்பட்டுஉள்ளன, 319 வழக்குகள் நிலுவையில் உள்ளன.மஹாராஷ்டிரா நீதிமன்றத்தில், 13 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டுள்ளன; 419 வழக்குகள் நிலுவையில் உள்ளன. மற்ற நீதிமன்றங்களின் வழக்கு விபரங்கள் தெரிவிக்கப்படவில்லை.இந்நிலையில், இந்த சிறப்பு நீதிமன்றங்களின் செயல்பாடு, செயல்திறன் மற்றும் ஒட்டுமொத்த தாக்கம் குறித்து விரிவான மதிப்பீடு செய்வது தொடர்பாக பரிந்துரைகளை அளிக்கும்படி, பல்வேறு உயர் கல்வி நிறுவனங்களுக்கு மத்திய சட்ட அமைச்சகம் கோரிக்கை விடுத்துள்ளது.ஐ.ஐ.எம்., - ஐ.ஐ.டி., சட்ட பல்கலைகள், நீதித்துறை கல்வி நிறுவனங்கள் உள்ளிட்டவற்றுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Ram pollachi
ஆக 20, 2024 12:39

திருடன் கிட்டயே சாவிய கொடுத்துவிட்டு திருட்டை ஒழிக்க முடியவில்லையே என புலம்பும் மக்கள்.


அப்பாவி
ஆக 20, 2024 09:48

இருக்கிற நீதிமன்றங்களிலேயே நீதியைக் காணோமாம்.


gmm
ஆக 20, 2024 08:17

சிறப்பு நீதிமன்றம் தேவையில்லை. தணிக்கை, அமலாக்க, வருமான வரி துறை இணைந்து ஆணையம் அமைத்து, புகார் அடிப்படையில் தேர்தல் ஆணையதிற்கு அறிக்கை கொடுக்க வேண்டும். அறிக்கையின் அடிப்படையில் MLA, MP பதவியை தேர்தல் ஆணையம் பறிக்க / நீடிக்க வேண்டும். 6 மாதத்தில் இறுதி முடிவு. அடுத்த குறைந்த வாக்கு பெற்ற மக்கள் பிரதிநிதிகள் பெறுப்பு ஏற்க வேண்டும். மசோதா மீது வாக்குரிமை கூடாது. எடுத்த நிர்வாக நடவடிக்கை சட்ட விரோதமாக இருந்தால் மட்டும் தான் நீதிமன்றம் விசாரிக்க வேண்டும். இறுதி செய்த பின் தான் நீதிமன்றம் தலையிட முடியும். தலைமை நீதிபதி பணி சிறப்பு. ஓய்வின் போது மறக்க முடியாத நினைவு பரிசு மத்திய அரசு வழங்க வேண்டும்.


Kasimani Baskaran
ஆக 20, 2024 05:45

மக்களுக்கு சேவை செய்யவேண்டும் என்ற அடிப்படை நோக்கம் இந்திய நீதித்துறைக்கு எள்ளளவும் கூட கிடையாது. இன்னும் பிரிட்டிஷ் கால கொலீஜியமே கோலோச்சுவது அதற்க்கு நல்ல எடுத்துக்காட்டு. நவீன தொழில் நுணுக்கங்களை புகுத்தினால் மாற்றம் வரலாம்.


மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி