உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கழிப்பறை வசதியில்லாமல் விமானத்தில் தவித்த பயணியர்

கழிப்பறை வசதியில்லாமல் விமானத்தில் தவித்த பயணியர்

புதுடில்லி : அமெரிக்காவின் சிகாகோவிலிருந்து, டில்லிக்கு புறப்பட்ட விமானத்தில் இருந்த கழிப்பறைகள் அடைத்துக்கொண்டதால், 10 மணி நேரத்துக்கும் மேலாக வானில் பறந்த ஏர் இந்தியா விமானம் மீண்டும் சிகாகோவில் தரையிறக்கப்பட்டது. அமெரிக்காவின் சிகாகோவில் இருந்து டில்லிக்கு சமீபத்தில் ஏர் இந்தியா நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் புறப்பட்டது. அடுத்த 10 மணிநேரத்துக்கும் மேலாக வானில் பறந்த நிலையில், மறுநாள் காலையில், சிகாகோ விமான நிலையத்தில் மீண்டும் தரையிறங்கியது.விமானத்தில் இருந்த கழிப்பறைகளில் அடைப்பு ஏற்பட்டு பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டதாலேயே விமானம் தரையிறங்கியது தெரியவந்துள்ளது.

இது குறித்து ஏர் இந்தியா நிறுவனம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

கடந்த 5ம் தேதி சிகாகோவில் இருந்து டில்லிக்கு விமானம் புறப்பட்டது. அடுத்த இரண்டு மணி நேரத்தில் விமானத்தில் இருந்த கழிப்பறைகளில் அடைப்பு ஏற்பட்டது குறித்து விமானிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பயணியர் நிலை கருதி விமானத்தை தரையிறக்க முடிவு செய்யப்பட்டது. அப்போது, அட்லாண்டிக் பெருங்கடல் மேல் விமானம் பறந்து கொண்டிருந்தது. பெரும்பாலான நாடுகளில் உள்ள விமான நிலையங்களில் இரவு நேரங்களில் தரையிறங்குவதில் கட்டுப்பாடு இருந்ததால், உடனடியாக விமானத்தை தரையிறக்க முடியவில்லை. இதனால் மீண்டும் சிகாகோ விமான நிலையத்திலேயே தரையிறக்க முடிவு செய்யப்பட்டது. வானில் 10 மணி நேரத்துக்கும் மேலாக பறந்த விமானம், மறுநாள் 6ம் தேதி சிகாகோவில் தரையிறங்கியது. விமானத்தில் நடத்தப்பட்ட சோதனையில் கழிப்பறைகளில் இருந்து செல்லும் குழாய்களில் கந்தல் துணிகள், பாலீதீன் பைகள், உள்ளாடைகள் உள்ளிட்டவை சிக்கியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

Jayaraman
மார் 12, 2025 03:26

நீண்ட தூரம் பயணிக்கும் விமானங்களில் , மெக்கானிக் ஒருவரையும் , கருவிகளோடு பயணிக்குமாறு செய்யலாம்


virgo
மார் 11, 2025 14:44

ஐயா நான் சென்ற 20 வருடங்களாக அலுவல் நிமித்தமாக மூன்று மாதங்களுக்கு ஒரு முறை தாய்லாந்து உள்ளிட்ட தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு சென்று வருகிறேன் பெரும்பாலும் ஏர் ஏசியா விமானத்தில் தான் பயணம் செய்வேன் முன்கூட்டியே உணவு முன்பதிவு செய்தால் தண்ணீர் இலவசமாக கிடைக்கும் ஏர் ஏசியா ஒரு மிகக் குறைந்த விலையில் டிக்கெட்டுகள் வழங்கும் ஒரு விமானம் என்பதால் அதில் இருக்க தேர்வு முதற்கொண்டு அனைத்துக்கும் பணம் செலுத்த வேண்டும் இதைத் தவிர்க்க வழக்கமாக என்ன செய்யலாம் என்றால் விமான நிலையத்தின் உள்ளே செல்லும் பொழுது காலி குடிநீர் பாட்டில்களை எடுத்துச் சென்றால் விமான நிலையத்தில் உள்ளே தண்ணீர் நிரப்பிக் கொள்ளலாம்.


Ramesh Sargam
மார் 11, 2025 12:42

நான் இரண்டு நாட்களுக்கு முன்பு தாய்லாந்து பாங்காக் நகரத்திலிருந்து, பெங்களூருவுக்கு Air Asia என்கிற விமானத்தில் பயணித்தேன். அந்த விமானத்தில் பலரும் குடிப்பதற்கு தண்ணீர் கேட்டார்கள். விமான சிப்பந்திகள் தண்ணீர் வேண்டுமென்றால் காசுகொடுத்து வாங்கித்தான் குடிக்கவேண்டும் என்று மிகவும் கண்டிப்பாக கூறிவிட்டார்கள். விலை ஒரு 500 ml பாட்டிலுக்கு ரூ. 200. யாருக்கு மனசு வரும் அவ்வளவு விலை கொடுத்து வாங்கி குடிப்பதற்கு. ஒரு சிலர் மட்டும் தாகம் தாங்கமுடியாமல் அந்த விலை கொடுத்து வாங்கி குடித்தார்கள். மற்றவர்கள் அந்த மூன்றரை மணி பயணத்தை தண்ணீர் குடிக்காமல் பயணித்தார்கள். அவர்களுக்கு ஏதாவது விபரீதம் ஏட்பட்டிருந்தால், Air Asia நிறுவனம் பொறுப்பு ஏற்குமா? குடிப்பதற்கு ஒரு தம்ளர் தண்ணீர் இலவசமாக கொடுப்பதில் அவர்களுக்கு என்ன பெரிய செலவு ஆகிவிடும்? கேடுகெட்ட Air Asia விமான நிறுவனம்.


अप्पावी
மார் 11, 2025 12:22

விமான நிலையங்களில் 10 ரூவாய்க்கு சமூசா போடறாங்க. சீக்கிரம் 20 ரூவாய்க்கு பிரியாணியும் போடுவாங்க. மூக்கு முட்ட சாப்புட்டு ப்ளேன் ஏறுங்க.


theruvasagan
மார் 11, 2025 10:58

நம்மாளுங்க எங்க போனாலும் மாறமாட்டானுக. ஏனென்றால் நம்ம நாட்டு சட்டங்களும் சரியில்லை. சட்டம் இயற்றுபவர்களாகட்டும் அதை அமல் படுத்துபவர்களாகட்டும் சட்டத்தை நிர்வகிப்பவர்களாகட்டும் எல்லா இடத்திலும் அலட்சிய மனப்பான்மையே. சுயஒழுக்கம் என்பது 99 சதவிகிதத்தினருக்கு அறவே கிடையாது. அதில் மட்டும் படித்தவன் படிக்காதவன் ஏழை பணக்காரன் என்கிற பேதமே கிடையாது.


अप्पावी
மார் 11, 2025 09:42

லைட்டா சாப்புட்டு பயணம் செய்ய முடியாது. வண்டில ஏறுவதற்கு முன்னாடியே வயிறு நிறைய சாப்புட்டு பின் வண்டில வர்ரது, தர்ரதையெல்லாம் சாப்புட்டு டாய்லெட்டை ரொப்புவாங்க.


Pandi Muni
மார் 11, 2025 11:05

அதுதான் மூர்க்க மாடல்


VENKATASUBRAMANIAN
மார் 11, 2025 08:26

பயணியரின் பொறுப்பற்ற செயலினால் இது ஏற்பட்டுள்ளது. கிராம மக்கள் எவ்வளவோபரவாயில்லை. விமானத்தில் பயணம் செய்யும் செய்பவர்கள் நாகரீகம் ற்றவர்கள்


Varadarajan Nagarajan
மார் 11, 2025 07:12

பொறுப்பில்லாத பயணியரின் செயலால் சகபயணியர்களுக்கு எவ்வளவு அவஸ்த்தை? அதுமட்டுமல்லாது விமான எரிபொருள், மீண்டும் விமானநிலைய கட்டணம் என விமான நிறுவனத்திற்கு எவ்வளவு நஷ்டம்? இதுபோன்ற செயல்களால் விமான நிறுவனத்திற்கு அவப்பெயர் மட்டுமல்லாது வாடிக்கையாளர்களை இழக்கும் நிலை. இவையெல்லாம் பொறுப்பற்ற செயலால் ஏற்படும் விளைவுகள். ஆனால் அதைப்பற்றியெல்லாம் அவர்கள் கவலைப்படுவதில்லை. இதுபோன்ற பயணியர் யாரென்று தெரிந்தால் விமான நிறுவனங்கள் அவர்களுக்கு தடைவிதித்தாலும் தவறில்லை


Appa V
மார் 11, 2025 06:50

ஓவர்னைட் அடல்ட் டயப்பர் கைவசம் வைத்துக்கொள்ளலாம் ..ரெயில்களில் நிலைமை மிக வருந்த தக்க நிலைமை ..எப்படி உபயோகிப்பதென்றே தெரியாதவர்கள் பலர் ..டாய்லெட் சீட்டில் சிறுநீர் கழிப்பது ..ஒழுங்காக flush செய்யாமல் வருவது ..பாட்டில் மூடிகளை கழிப்பிடங்களில் போடுவது வருந்தத்தக்கது


D.Ambujavalli
மார் 11, 2025 06:10

கழிக்கப்பட்ட பொருள்களைப்போட disposal வசதி இருந்தும் சற்றும் பொறுப்பில்லாத சில பயணிகளால் எவ்வளவு தொல்லை இந்த அளவு கூட பொறுப்பு, அறிவில்லாதவர்களால் விமான கம்பெனிகளுக்கும் எவ்வளவு நஷ்டம்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை