உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நீதிமன்ற நடைமுறைகளால் மக்களுக்கு அதிருப்தி: தலைமை நீதிபதி பேச்சு

நீதிமன்ற நடைமுறைகளால் மக்களுக்கு அதிருப்தி: தலைமை நீதிபதி பேச்சு

புதுடில்லி : 'நீதிமன்ற நடவடிக்கைகளால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். அதனால்தான், லோக் அதாலத் போன்ற சமரச நடைமுறைகளை விரும்புகின்றனர்,' என, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் கூறினார்.உச்ச நீதிமன்றத்தின், 75வது ஆண்டையொட்டி, ஒரு வாரத்துக்கு, லோக் அதாலத் நடத்தப்பட்டது. நிலுவையில் உள்ள வழக்குகளை குறைக்கும் வகையில், இதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இது நிறைவு விழாவில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்பேசியதாவது:லோக் அதாலத் என்பது, ஒரு பிரச்னை தொடர்பாக இரு தரப்புக்கும் இடையே பேச்சு நடத்தி, தீர்வு காண்பதாகும். பரஸ்பரம் ஒப்புதலுடன், இதில் முடிவு எடுக்கப்படுவதால் மேல்முறையீடு செய்ய முடியாது.தற்போது நீதிமன்ற நடவடிக்கைகளால் மக்கள் அதிருப்தியில் உள்ளனர். தங்களுடைய பிரச்னைக்கு மாற்று வழியில் மிக விரைவாக தீர்வு காண்பதற்கு விரும்புகின்றனர். நம்முடைய நீதிமன்ற நடவடிக்கைகள், ஒரு தண்டனையாக உள்ளது. இதுவே நீதிபதிகளின் கவலையாகவும் உள்ளது. வழக்குகளில் விரைவில் தீர்வு காணப்பட வேண்டும் என்பதே எங்களுடைய விருப்பமும்.உச்ச நீதிமன்றம் டில்லியில் இருந்தாலும், அது நாட்டின் தலைமை நீதிமன்றமாகும். அனைத்து தரப்பு மக்களையும் சென்றடையும் வகையில், பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். முதலில், ஏழு அமர்வுகளுடன், இந்த லோக் அதாலத் நடத்த திட்டமிட்டோம். தற்போது, 13 அமர்வுகளுடன் விசாரணை நடத்தப்பட்டது. லோக் அதாலத் என்பது, மக்களின் வீடுகளுக்கு நீதியை கொண்டு செல்வதாகும். இதனால் மக்களுக்கு உடனடி தீர்வு கிடைக்கிறது.இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 21 )

Ramakrishnan Arunachalam
ஆக 07, 2024 15:13

கீழ் கோர்ட்டுகள் மீது மக்களுக்கு நம்பிக்கை குறைந்து விட்டது.போலிஸ் துணையுடன் வக்கீல்கள் சேர்ந்து நடந்து கொள்ளும் செய்கைகள் வெற்றியடைய வேண்டிய கேஸ்கள்கூட தோற்று போய்விடுகிறது..அதனால் லோக் அதாலத்து நம்ப வேண்டியுள்ளது.


Ramakrishnan Arunachalam
ஆக 07, 2024 14:48

கீழ் கோர்ட் மீது மக்களுக்கு நம்பிக்கை குறைந்து விட்டது. அதனால் தான் அப்பீல் போறாங்க. கீழ் கோர்ட்டில் லோக்கல் இணைப்பிலுன்ஸ் களினால் முடியாத மக்கள் பாதிக்கப் படுகிறார்கள். இது வக்கீல்களை நம்ப முடியாதனால் என்பது உண்மை. இதற்கு போலிஸும் துணைபோவதனால்தான்.


Raja Jai
ஆக 05, 2024 23:02

கர்நாடகா மாநிலத்தில் தற்போது நடைமுறைக்கு வந்திருக்கும் புதிய சட்ட திருத்தங்கள் போல அனைத்து மாநிலங்களிலும் கொண்டு வர வேண்டும் அப்போது ஓரளவுக்கு நீதித்துறையை சீர்திருத்த முடியும்


Raja Jai
ஆக 05, 2024 22:59

தாமதப்படுத்தப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதிக்கு சமம் என்பதை நாம் எல்லோரும் அறிவோம். தாமதம் என்பதும் மந்தமாக செயல்படுவது என்பதும் சனிக்குரியகுணம்.. சனிக்கு பிடித்த கலர் கருப்பு.. சனி நீதி வழங்கும் தொழில் புரிகிறான். உண்மையில் சனியை பெரும்பாலான மக்கள் வெறுக்கிறார்கள். மீதியுள்ளவர்கள் சனியை நினைத்து பயத்துடன் வணங்குகிறார்கள். ஆனால், சனிபகவான் எல்லோருடைய வாழ்விலும் தனது மந்தமான நடவடிக்கைகள் மூலமே தீர்வை வழங்குகிறார். எனவே, மக்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும்.முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவம் ஐயா அவர்கள் ஈரோடு வழக்கறிஞர்கள் கூட்டம் ஒன்றில் விருந்தினராக கலந்து கொண்டு பேசும் போது , தனது சொந்த பாகப்பிரிவினை வழக்கில் முறையான விசாரணையின்றி பவானி நீதிமன்றத்தில் பல வருடங்களாக நடந்து கொண்டிருப்பதாக கூறி வேதனைப்பட்டார் நிலைமை இப்படி இருக்க இந்திய நீதித்துறை என்ன செய்ய வேண்டும்? தற்போது கர்நாடக மாநிலத்தில் புதிய சட்டத்திருத்தம் மூலம் அந்த மாநில நீதித்துறையில் சில மாற்றங்கள் கொண்டு வந்துள்ளது. அதைப்போல மற்ற மாநிலங்கள் தானாகவே முன்வந்து நீதித்துறையில் சில மாற்றங்கள் ஏற்படுத்த வேண்டும். அதாவது உச்சநீதிமன்றம் என்று சொல்லக்கூடிய சனிபகவான் அவராகவே மாற்றத்தை ஏற்படுத்த மாட்டார். அது அவரால் இயலாது என்பது அவருக்கு மட்டுமே தெரியும்.எனவே மக்கள் மாற்றமான சட்டமன்றத்தின் மூலம் இந்த பிரச்சினைகளை ஓரளவு தீர்க்க முடியும் என நினைக்கிறேன்.


Balasubramanian Gk
ஆக 04, 2024 22:38

Lok Adalat for only corporate people like reliance tata not for innocent common people


Gnanasekaran Vedachalam
ஆக 04, 2024 13:45

இப்போது நாட்டின் பல உயர் நீதிமன்றங்கள் தங்கள் கடமையை உணர்ந்து வழக்குகளை வேகமாகவும் துரிதமாகவும் விசாரித்து தீர்ப்புகளை காலத்தே வழங்கி சமூக நீதியை காக்கின்றன அந்த வகையில் மெட்ராஸ் ஹை கோர்ட் கிளை மதுரை பணி மிக பிரமாதமாக சிறப்பாக அருமையாக ஏழை எளிய மக்களின் சமூக நீதியை காப்பதில் மிக முன்னணி நிலைமையை பல ஆண்டுகளாக காத்து சிறப்பாக செயல் படுகிறது


UTHAYA KUMAR
ஆக 04, 2024 11:13

இந்தியா வொட சாபகேடு நீதிமன்றம் தான். இத ஆளும் கட்சியும் பேசது ஏதிர் கட்சியும் பேசாது. பண்ணம் இருக்கவே ஐகோர்ட் சுப்ரீம்கோர்ட் போவ பவ பட்டவே எங்க போவ? பவபட்டவே கோர்ட் போகவே பயபடுற. எங்க பணம் கேஸ் நடத்தியே போயிருமோனு,


spr
ஆக 04, 2024 10:38

"நீதிமன்ற நடவடிக்கைகளால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். அதனால்தான், லோக் அதாலத் போன்ற சமரச நடைமுறைகளை விரும்புகின்றனர்." பணி ஒய்வு பெற்ற பின் என்ன பேசுவது என்பதற்கு இப்பொழுதிலிருந்தே ஒத்திகை பார்க்கிறார் போலும். இன்னமும் பல முக்கியமில்லாத வழக்குகள் ஏற்கப்பட்டு, முடிக்கப்படாமல் மென்மேலும் ஒத்தி வைக்கப்படுகிறதே பேரம் படியவில்லை என்ற உணர்வை மக்களிடம் உண்டாக்குகிறது பல அரசியல் குற்றவாளிகளின் மேலுள்ள வழக்குகள் பல தலைமுறைகளாகத் தொடர்வதும் அதற்குள் சாட்சியங்கள் பிறழ்வதுவும் அவர்கள் தப்பிப்பதுவும் நீதிபதிகள் அறிந்தே நடக்கிறது. இப்பொழுதாவது இருக்கும் சில மாதங்களுக்குள் இவர் தன் அதிகார வரம்பிற்குட்பட்டு தவறு செய்யும் நீதிபதிகளைக் கண்டிக்க வேண்டும் இனி இவர் இழப்பதற்கு எதுவமில்லை


UTHAYA KUMAR
ஆக 04, 2024 11:14

கரெக்ட்


Soosaimanickam
ஆக 04, 2024 10:19

நீதி தாமதமாவதால் அது அநீதி தான்.எல்லோரையும் பிணையில் விடுவதும் பிடிக்காத எதிர்க்கட்சியினரை உள்ளே வைத்திருப்பதும் வாடிக்கையாகிப்போன விஷயங்கள்.


amuthan
ஆக 04, 2024 10:15

நீட் தீர்ப்பு அதற்கு சாட்சி.


மேலும் செய்திகள்













முக்கிய வீடியோ