உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஆனி மாத பூஜைகளுக்கு சபரிமலை நாளை திறப்பு

ஆனி மாத பூஜைகளுக்கு சபரிமலை நாளை திறப்பு

சபரிமலை : ஆனி மாத பூஜைகளுக்காக நாளை மாலை, சபரிமலை நடை திறக்கப்படுகிறது.ஆனி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை நாளை மாலை 5:00 மணிக்கு திறக்கப்படுகிறது. மேல் சாந்தி மகேஷ் நம்பூதிரி, நடை திறந்து தீபம் ஏற்றுகிறார். தொடர்ந்து பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர்; வேறு பூஜைகள் நடக்காது. இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்படும். ஜூன் 15 அதிகாலை 5:00 மணிக்கு நடை திறந்ததும் தந்திரி மகேஷ் மோகனரரு நெய்யபிஷேகத்தை தொடங்கி வைப்பார். தொடர்ந்து வழக்கமான பூஜைகள் நடக்கும். 19 வரை நடை திறந்திருக்கும். எல்லா நாட்களிலும் வழக்கமான பூஜைகளுடன் இரவு 7:00 மணிக்கு படி பூஜை நடக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை