உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / செந்தில் பாலாஜி ஜாமின் மனு: ஜூலை 10ம் தேதிக்கு ஒத்திவைப்பு

செந்தில் பாலாஜி ஜாமின் மனு: ஜூலை 10ம் தேதிக்கு ஒத்திவைப்பு

புதுடில்லி: அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனுவை ஜூலை 10ம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது. சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் ஜாமின் கோரியும், வழக்கு விசாரணையை ரத்து செய்யக் கோரியும் உச்சநீதிமன்றத்தில் கடந்த மாதம் செந்தில் பாலாஜி மனு அளித்திருந்தார். இதனை உச்சநீதிமன்றம் கடந்த மாதம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=6gwyf8ju&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. மத்திய அரசு தலைமை வழக்கறிஞர் ஆஜராகவில்லை. இதனையடுத்து , மனுவை வரும் ஜூலை 10ம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.சமீபத்தில், மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்ட அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால ஜாமின் வழங்கியது. அதேபோல், செந்தில் பாலாஜிக்கும் இன்று ஜாமின் கிடைக்கும் என அவரது ஆதரவாளர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் மனுவை உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 20 )

V RAMASWAMY
மே 16, 2024 16:08

இவர் ஜாமீனுக்காக போட்டுக்கொண்டிருக்கும் மனுக்கள் எண்ணிக்கை கின்னஸ் புத்தகத்தில் வரும் போல் இருக்கிறது, தவிர இவரிடம் சட்ட விரோதமோக இருப்பதாக சொல்லப்படும் பணம் இந்த ஜாமீனுக்காக போடப்படும் மனுக்களுக்காகவே சிலவாகிவிடும் போலிருக்கிறதே


இவன்
மே 16, 2024 15:28

வீர தமிழன், ஊழல் வாதிகள் விடுதலை, வாய்மை வெல்லும் ??


வீர தமிழன்
மே 16, 2024 14:25

நமது தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் முன்னமே சொல்லிவிட்டார் இந்தி கூட்டணி வரும் 4ஆம் தேதி அமோக வெற்றி பெறும் என்று அவர்கள் ஏழாம் தேதி பதவி ஏற்ற உடன் இந்தி கூட்டணி தலைவர்கள் மேல் போடப்பட்ட எல்லா பொய் கேஷ்களும் தள்ளுபடி செய்யப்படும் ஆகையால் இந்த ஒத்திவைப்பு பால் எந்தப் பயனும் இல்லை நிச்சயம் வாய்மை வெல்லும்.


vadivelu
மே 16, 2024 18:44

பொய் கேஸ்கள் இருந்தால் தள்ளுபடி செய்யப்படலாம், இருக்கணுமே


GMM
மே 16, 2024 14:16

செந்தில் பாலாஜி ஜாமீன் மனு உடன் தள்ளுபடி செய்ய வேண்டும் தமிழக பொன்முடி, டெல்லி கெஜ்ரிவால் மீண்டும் சிறை உச்ச நீதிமன்றம் தன் மதிப்பை காக்க இது ஒரு வழி அரசு ஊழியர்கள் அனைவருக்கும் அதிகாரம் உண்டு யாருக்கும் ஒட்டு மொத்த அதிகாரம் இல்லை நீதிமன்றம் மட்டும் சட்டத்தை விசித்திரமாக பயன்படுத்தி வருகிறது பின் விளைவு தரும், தவறான சட்ட உத்தரவுகளை அரசு நிராகரிக்க முடியும் செயல் ஆணை மட்டும் தான் அமுல் படுத்த வேண்டும் செயல் ஆணை பிறப்பிக்க நீதிமன்றம் அதிகாரம் பெறவில்லை?


Rajamani K
மே 16, 2024 13:56

கிட்டத்தட்ட இன்னும் இரண்டு மாதம் சூப்பர்


Anbuselvan
மே 16, 2024 13:53

ஒரு வேளை இண்டி கூட்டணி ஆட்சிக்கு வந்து விட்டார் ஜூலை மாதம் இவருக்கு ஜாமீன் வழங்க படுமோ என்னவோ


Jai
மே 16, 2024 13:33

செந்தில் பாலாஜி அவர்கள் தொடர்ந்து ஜாமீன் கேட்டுக் கொண்டிருக்கிறார். ஆனால் அவரது தம்பி இன்னும் ஆஜராகவில்லை. அவரது தம்பிக்கு பெரியஇடம் வாங்கி, அவ்வளவு பெரிய வீடு கட்ட வருமானம் வந்தது என்று அவர் தான் சொல்லவேண்டும். இதற்கு முடிவு கிடைக்காததால் தான் செந்தில் பாலாஜி அவர்களுக்கு ஜாமீன் கிடைக்கவில்லை. இருந்தாலும் திமுகவிற்கும் செந்தூர் பாலாஜிக்கும் இருக்கும் சக்திகளை?? கொண்டு எப்போதும் வேண்டுமானால் வெளியில் வரலாம். நமது பொன்முடியார் வெளியில் இல்லையா?


S SRINIVASAN
மே 16, 2024 13:30

As some one commented that the judiciary is becoming very worst and people are losing confidence . how Kejriwal got the bail now Senthil Balaji is asking for bail, tomorrow Hemant Soren will ask for a bail, thisl will continue there is no stoppage if a person is accused of bribing or looted the public money why should he have been given bail straight away they should reject, common person will not get bail like this judiciary going in wrong direction. judiciary double standard is exposed


Nagarajan D
மே 16, 2024 13:20

தள்ளுபடி செய்யப்பட்டிருக்கவேண்டிய வழக்கு எதற்க்காக ஒத்திவைக்கப்பட்டது தெரியவில்லை தினமும் ஒரு ஜாமீன் மனு தினமும் ஒரு காரணம் நீதிமன்றங்கள் மேல் மக்கள் நம்பிக்கை இழக்க இதெல்லாம் தான் கரணம் செந்தில் பாலாஜி கைதானது முதல் இது வரை வெவ்வேறு நீதிமன்றங்களில் சுமார் ஜாமீன் மனு செய்திருப்பான் இதை போன்று பொது மக்களுக்கு சலுகை கிடைக்குமா


Ramanujadasan
மே 16, 2024 13:56

காசே தான் கடவுளடா


Krishnan Periyasamy
மே 16, 2024 14:57

மத்திய அரசே விட்டாலும் அதிகாரிகள் விட ஏன் என்றால் விசாரணைக்கு போன அதிகாரியை தாக்கியது விடமாட்டாங்க


Ramanujadasan
மே 16, 2024 13:07

மத்தியில் பிஜேபி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்த மாதிரி பல வழக்குகள் குற்றவாளிகளுக்கு எதிராக திரும்பும்


மேலும் செய்திகள்









புதிய வீடியோ