உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / திருப்பதியில் 4 நாட்களில் 14 லட்சம் லட்டுகள் விற்பனை: நம்பிக்கையை அசைக்க முடியாது என பக்தர்கள் உறுதி

திருப்பதியில் 4 நாட்களில் 14 லட்சம் லட்டுகள் விற்பனை: நம்பிக்கையை அசைக்க முடியாது என பக்தர்கள் உறுதி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருப்பதி: திருப்பதி லட்டு குறித்து சர்ச்சை எழுந்துள்ள நிலையில், 4 நாட்களில் 14 லட்சம் லட்டுகள் விற்பனை ஆகி உள்ளன.ஜெகன்மோகன் ரெட்டியின் ஆட்சியில் திருப்பதி லட்டுவில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்டதாக முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டினார். இது குறித்து குஜராத் ஆய்வகத்தில் நடத்தப்பட்ட பரிசோதனையில் லட்டுவில் விலங்கு கொழுப்பு, மீன் எண்ணெய் இருந்ததற்கான தடயம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதாக அரசு தெரிவித்து உள்ளது. ஆனால், இந்த குற்றச்சாட்டை ஜெகன்மோகன் ரெட்டி மறுத்து,பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி உள்ளார். இதனிடையே, இந்த விவகாரம் விவகாரம் குறித்து விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டு உள்ளது. இந்த விவகாரம் அம்மாநில அரசியலில் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. நாடு முழுவதும் விவாதத்தை கிளப்பி உள்ளது.இந்நிலையில், திருப்பதி தேவஸ்தானத்தின் அறிக்கைப்படி கடந்த 4 நாட்களில் 14 லட்சம் லட்டுகள் விற்பனை செய்யப்பட்டு உள்ளது தெரியவந்துள்ளது.செப்., 19 ல் 3.59 லட்சம் செப்.,20 ல் 3.17 லட்சம்செப்.,21 ல் 3.67 லட்சம் செப்.,22 ல் 3.60 லட்சம் லட்டுகள் விற்பனை செய்யப்பட்டு உள்ளன.இது தொடர்பாக சில பக்தர்களிடம் ஆங்கில மீடியாக்கள் பேட்டி எடுத்தன. அப்போது அவர்கள் கூறுகையில் , எங்களின் பக்தி வலிமையானது. அதனை அசைக்க முடியாது. லட்டு குறித்த சர்ச்சை கடந்த காலத்தில் நடந்தது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். வழக்கமாக தினமும் 3 லட்சம் லட்டுகள் விற்பனை ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

vasudevan.a Devan
செப் 25, 2024 15:26

வீக்லி ப்ரீபெய்ட் தர்சன் சில நாட்கள் , பிரீ தர்சன் சில நாட்கள் என்று வைத்தல் நலம்.


பட்டினத்தார் , மலையும் மலை சார்ந்த பகுதி
செப் 25, 2024 12:39

திருப்பதி லட்டு குஜராத்திலா தயாரிக்கப்பட்டது.? ஆச்சரியமாக உள்ளது. இந்துக்கள் எல்லோரும் திருப்பதி திருமலையில் தயாரிப்பதாக நினைத்து கொண்டு இருக்கிறார்கள். திரு.ஜசக் அவர்கள் சொல்வதை பார்த்தால் குஜராத்தில் தயாரிக்க படுவதாக கூறுகிறார். போலிகள் அங்கு தான் அதிகம் என்கிறார்.


Kasimani Baskaran
செப் 25, 2024 05:32

அனைத்திலும் கலப்படம் என்பதை புரிந்து கொண்டார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். மற்றப்படி கோவில் நிர்வாகம் மீது நம்பிக்கை வந்து விட்டது அல்லது ஆய்வுக்கூடம் பொய் சொல்கிறது என்றேல்லாம் கண்டிப்பாக எடுத்துக்கொள்ளவில்லை. கலப்படம் செய்து நெய் சப்பளை செய்த நிறுவனம் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட வேண்டும்.


ஜெய்ஹிந்த்புரம்
செப் 24, 2024 23:51

வாயிலே லட்டு ..


முருகன்
செப் 24, 2024 22:50

இதிலிருந்து தெரிவது என்னவென்றால் யாரும் மக்களை குழப்ப முடியாது


J.Isaac
செப் 24, 2024 22:35

ஏழை எளிய மக்கள் உபயோகிக்கிற ரசம் தயாரிக்க உதவும் பூண்டு கிலோ ரூ 500 விற்கிறதை பற்றி யாரும் விவாதிப்பதில்லை


T.sthivinayagam
செப் 24, 2024 21:53

லட்டு பிரச்சினையை பற்றி சீமான் சார் இது வரை ஏன் ஒன்றும் சொல்லவில்லை


கிஜன்
செப் 24, 2024 21:31

சாமி கும்பிடும்போது பின்னாலிருந்து அடித்து ...பிடித்து தள்ளிவிட்டு ...கையை பிடித்து இழுத்து ... பெரியவர் சிறியவர் ...பெண்கள் என்ற வயசுவித்தியாசம் பார்க்காமல் ...போ போ என விரட்டுகிறார்கள் .... சிலசமயம் மனசு சங்கடப்படுகிறது .... கொஞ்சம் கவுரவமாக நடத்தினால் நன்றாக இருக்கும் ...


mei
செப் 24, 2024 21:29

திருப்பதியான் மகிமையால் மாட்டுக்கொழுப்பும் அமுதம் ஆகும் ?? கோவிந்தா கோவிந்தா


J.Isaac
செப் 24, 2024 21:20

போலி பொருட்கள் தயாரிப்புக்கு பெயர் பெற்றது குஜராத்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை