உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 13வது மாடியில் இருந்து தவறி விழுந்த 2 வயது குழந்தை; காப்பாற்றிய இளைஞருக்கு குவியும் பாராட்டு

13வது மாடியில் இருந்து தவறி விழுந்த 2 வயது குழந்தை; காப்பாற்றிய இளைஞருக்கு குவியும் பாராட்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

தானே: மஹாராஷ்டிராவில் 13வது மாடியில் இருந்து தவறி விழுந்த குழந்தையை காப்பாற்றிய இளைஞருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. தானேவில் உள்ள தேவிசபாடா பகுதியில் கடந்த வாரம் நடந்த சம்பவம் தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 13 மாடியில் விளையாடிக் கொண்டிருந்த 2 வயது குழந்தை ஒன்று எதிர்பாராதவிதமாக கீழே விழுந்தது. அப்போது, அங்கிருந்த பாவேஷ் மாத்ரே என்ற இளைஞர் உடனடியாக ஓடிச் சென்று குழந்தையை காப்பாற்றினார். இருப்பினும், சிறு காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டது. இது தொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வைரலான நிலையில், இவர்தான் உண்மையான ஹீரோ என்று பாவேஷூக்கு நெட்டிசன்கள் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

Alagarsamy Ravichandran
ஜன 29, 2025 10:50

அருமை. நன்றி


S. Neelakanta Pillai
ஜன 28, 2025 06:11

போலி சினிமா ஹீரோக்களை கொண்டாடப்படுவதை என்னவென்று சொல்ல. அதை விட அசிங்கம் அந்த போலி ஹீரோக்கள் அவர்களும் தங்களை ஹீரோ என்று நம்பி அதிகாரம் செலுத்தும் இவர்கள் அனைவரும் இது போன்ற உண்மை ஹீரோக்களின் காலில் விழுந்து வணங்க வேண்டும்.


VENKATASUBRAMANIAN
ஜன 27, 2025 18:54

மற்றவர்களும் இதன் மூலம் திருந்தட்டும்.


kannan marisamy
ஜன 27, 2025 17:59

மனித உருவில் கடவுளாக அந்த இளைஞர்


Kumar Kumzi
ஜன 27, 2025 16:25

இதை தான் மனித உருவில் வந்த கடவுள் என்று இந்துக்கள் கூறுவார்கள் வாழ்த்துக்கள் இவனுக்கு மத்திய விருது வழங்கி கெளரவிக்க பட வேண்டும்


RAMESH
ஜன 27, 2025 16:19

குழந்தைக்கு ஆயுசு கெட்டி . குழந்தையின் எடை, விழுகிற வேகம் அதுவும் அதிக உயரத்திலிருந்து எப்படி சாத்தியம் என்று நமக்கு தோணுது. அந்த இளைஞனை நாம் மனதார பாராட்டுவோம் .


Rajarajan
ஜன 27, 2025 14:36

வாழ்த்துவோம். இருப்பினும், பெரும்பாலான அடுக்குமாடி குடியிருப்புகளில் இதே நிலைமை தான். குழந்தைகள் எட்டிப்பார்க்கும் வகையில் இருக்கும், குறிப்பாக கண்ணாடியில் தடுப்பு இருக்கும்.


chennai sivakumar
ஜன 27, 2025 14:02

No builder is showing keen interest in safety aspects. They are concerned about the elevation design by the architects. Similarly persons occupying such risky flats meaning lot of potential to fall down either dont have knowledge or dont bother.


N.Purushothaman
ஜன 27, 2025 13:37

பெற்றோர்கள் எவ்வளவு அஜாக்கிரதையாக இருக்கிறார்கள் ? குழந்தைகளை இப்படி விளையாடும் போது அருகில் இருக்க வேண்டாமா ?


Oru Indiyan
ஜன 27, 2025 13:33

மிக சிறப்பு. பாராட்டுக்கள்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை