உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான 3 சிறுமிகள் தற்கொலை: ம.பி.,யில் சோகம்

பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான 3 சிறுமிகள் தற்கொலை: ம.பி.,யில் சோகம்

போபால்: ம.பி.,யில் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட 3 சிறுமிகள் தற்கொலை செய்து கொண்ட நிகழ்வு அம்மாநிலத்தில் பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.பல மாநிலங்களில் கடந்த சில நாட்களாக பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. குற்றவாளிகள் கைது செய்து சிறையில் அடைக்கப்படுகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்னர் மஹாராஷ்டிரா மாநிலம் புனேயில் போலீஸ் ஸ்டேசன் அருகே பஸ்சிற்குள் வைத்து இளம்பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார். தீவிர தேடுதல் வேட்டைக்கு பிறகு குற்றவாளியை போலீசார் கைது செய்தனர்.அதேபோல், ம.பி., மாநிலம் குவாலியர் மாவட்டத்தில் 5 வயது சிறுமி ஒருவரை சிறுவன் பாலியல் வன்கொடுமை செய்து, கொடூரமாக தாக்கினான். இதில் அந்த சிறுமியின் பிறப்புறுப்பில் 28 தையல் போடப்பட்டது. அச்சிறுமி தொடர்ந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். அந்த சிறுவனை போலீசார் கைது செய்துள்ளனர். இரண்டு பேரையும் தூக்கில் போட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.இந்நிலையில், ம.பி., மாநிலத்தில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான 3 சிறுமிகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.

முதல் சம்பவம்

ஜபல்பூர் மாவட்டத்தை சேர்ந்த 14 வயது சிறுமி கடந்த சில நாட்களுக்கு முன்னர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். மருத்துவ பரிசோதனையில் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானது உறுதி செய்யப்பட்டது. விசாரணையில் சகோதரர் உறவுமுறை கொண்ட நபரே சிறுமியை வன்கொடுமை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து போக்சோ சட்டம் மற்றும் பிஎன்எஸ்( பலாத்காரம்) ஆகிய சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து குற்றவாளி கைது செய்யப்பட்டார்.

இரண்டாவது சம்பவம்

அதே போல் கடந்த பிப்.,21 அன்று சிதி மாவட்டத்தை சேர்ந்த 16 வயது சிறுமி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். 11வது படிக்கும் அந்த சிறுமியை இரண்டு இளைஞர்கள் பாலியல் வன்கொடுமை செய்தது, அச்சிறுமி எழுதிய கடிதம் மூலம் தெரியவந்தது. இதனால், அச்சிறுமியின் உடலில் காயங்கள் இருந்தது தெரியவந்தது. டாக்டர்கள் முயற்சி செய்தும் அச்சிறுமியை காப்பாற்ற முடியவில்லை. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மூன்றாவது சம்பவம்

ஷிவ்புரி மாவட்டத்தில் 17 வயது சிறுமியும், 6 வயது சிறுவனும் நகரில் தங்கி படித்து வருகின்றனர். அதே பகுதியில் வசிக்கும் இளைஞர்கள் இரண்டு பேர் அச்சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தனர். இதனால் விரக்தியடைந்த அந்தச் சிறுமி சொந்த கிராமத்திற்கு சென்று நேற்று தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது உடலில் பலாத்காரம் செய்யப்பட்டதற்கான காயங்கள் உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்து உள்ளனர். கடந்த வாரமும் சிறுமி தற்கொலைக்கு முயன்றதாகவும், மீட்டு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வீட்டிற்கு திரும்பிய நிலையில், மீண்டும் தற்கொலை செய்து கொண்டதாக பெற்றோர்கள் கூறியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

ஜபல்பூர் ஜம்பு
மார் 02, 2025 07:35

ம.பி யின் தமிழக எம்.பி சாட்டையால் அடித்துக் கொள்வாரா?


Priyan Vadanad
மார் 02, 2025 01:31

இது எல்லா மாநிலங்களிலும் நடக்கிற ஒரு கொடூரம். இந்த விஷயத்தில் சங்கி சொங்கி என்றும் உப்பீஸ் மலை200 மலையார் சொன்ன 200 ருபாய் என்றும் ஒருவரை வார்த்தைகளால் தாக்கிக்கொண்டு அசிங்கப்படுத்தாமல் இருக்கலாம். இந்த விஷயத்தில், மைனர் என்றாலும்கூட, தண்டனை மிகவும் கடுமையாகவும் கொடுமையாகவும் இருக்கவேண்டும் என்பதே நல்லோரின் விருப்பம்.


தமிழன்
மார் 01, 2025 22:31

சங்கிகள் ஆட்சியில் இதெல்லாம் சாதாரணமப்பா அவனுகளுக்கு அடுத்தவன் முதுகுல இருக்கிற அழுக்கை பார்த்து குற்றம் சொல்லவே நேரம் பத்தல அப்புறம் எப்படி தன் முதுகில் இருக்கும் அழுக்கு தெரியும்?? திருட்டு திராவிட விடியா ஆட்சியும் இப்படித்தான் எவனும் நல்லது செய்ய அரசியலுக்கு வருவதில்லை வந்தாலும் நல்லவனாக இருக்க விடுவதில்லை நாடு முழுவதும் இருக்கும் சாக்கடை


RAMAKRISHNAN NATESAN
மார் 01, 2025 21:52

பதினெட்டு வயதுக்குக் குறைவானவர்களைப் பாலியல் வன்கொடுமை செய்தால் ஒரே வாரத்தில் தூக்கு ..... இது நாடு முழுவதும் நேரலை செய்யப்படவேண்டும் .... அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களைப் பாலியல் வன்கொடுமை செய்தால் ஆண்மை நீக்கம் .... இதுவும் நாடு முழுவதும் நேரலை செய்யப்படவேண்டும் ....


Karthik
மார் 02, 2025 15:08

மிகச்சரியான பதிவு..


sankaran
மார் 01, 2025 21:44

காம தூண்டுதலுக்கு தண்டனை கிடையாது... ஆனால் காம செயலுக்கு தண்டனை உண்டு.. சும்மா ஒரு வருஷம் சினிமா ப்ரொடுக்ஷன் , சினிமா தியேட்டர் , மற்றும் போர்னோகிராபி, இவைகளை முழுவதும் கிளோஸ் பண்ணி பார்க்கலாமே... காம செய்லகள் குறைந்தால் அப்படியே தொடரலாம்...


MARUTHU PANDIAR
மார் 01, 2025 21:41

பெண்களுக்கெதிரான குற்றம் மட்டும் இல்லை , இவனுக்களை வைத்து முழு நேர கிரிமினல்களும் கொலை கொள்ளைகளை நடத்திக் கொள்ள தோதான சட்டம் தான் இப்போது உள்ளது .. இன்றைக்கு தமிழகத்தில் பள்ளி தலைமை ஆசிரியர்/ ஆசிரியர் ,,தாளாளர் இப்படி பலர் அன்றாட கற்பழிப்பில் ஈடு படுகிறார்கள் அல்லவா , அவற்றை திசை திருப்ப கனி அக்கா போன்றோருக்கு இந்த நிகழ்வு ஒரு கோல்டன் சான்ஸ் தான் அப்படீங்கறாங்க


Arunkumar,Ramnad
மார் 01, 2025 21:41

ஊபிஸ்கள் எங்கிருந்தாலும் விழுந்தடித்துக் கொண்டு மேடைக்கு வந்து ஒப்பாரி வைக்கவும்.


MARUTHU PANDIAR
மார் 01, 2025 21:36

எது எதிர்கொ சட்டத் திருத்தம் கொண்டு வருகிறார்கள் , பெண்களுக்கு சம உரிமையும், ஏன் அதற்கு மேலும் கொடுப்பதாகக் கூறிக் கொள்கிறார்கள் ...இன்றைக்கு பெரும் குற்றங்களை சிறார்கள் எனப்படும் கயவர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள், அவனுகளுக்கு இன்றைக்கு தெரியாத விஷயமே கிடையாது ..வீட்டில் ஓசி சோறு தின்று விட்டு பொறுப்பு எனறு ஒன்று இல்லாததாலும் , சிறார் " கோட்டாவில் தண்டனை என்பதே கிடையாது என்ற திமிரிலும் தான் குற்றம் இழைக்கிறார்கள்...நாடாளுமன்றத்தில் தண்டனைக்குரிய வயதை ஒரு அவசரத் சட்டத்தின் மூலம் 14 ஆக்க குறைத்தால் என்ன குடி முழுகி விடும் ? இல்லையேல் இந்திய ஒரு ரேப்பிஸ்ட் நாடு என்ற பட்டத்தை சுமக்க வேண்டியது தான் .


Duruvesan, தர்மபுரி பாட்டாளி
மார் 01, 2025 21:35

சங்கீ ஆட்சி, மலைக்கு முட்டு குடுக்க நேரம் பத்தாது


RAMAKRISHNAN NATESAN
மார் 01, 2025 22:29

தமிழகத்தில் நடந்தால் ஆட்சி பொறுப்பில்லை ....


Sudha
மார் 01, 2025 21:23

கைதான ஒரு மாதத்திற்குள் தண்டனை தந்தாலொழிய குற்றங்கள் குறையப் போவதில்லை, இது தவிர பள்ளிகள், குடும்பங்கள் என்ன செய்யவேண்டும் எனும் வழிகாட்டுதல்கள் வெளியிடவேண்டும். எப்போது ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் வன்செயல்கள் ஈடு படுகிறார்களோ அதற்கான தண்டனை உடனடியாக செயல்படுத்த படவேண்டும்