உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 3 வயது குழந்தை தவிப்பு

ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 3 வயது குழந்தை தவிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஆமதாபாத்: குஜராத்தில் 3 வயது குழந்தை ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த சம்பவம் நடந்துள்ளது.குஜராத்தின் துவராகா மாவட்டத்தில் கல்யாண்பூர் தாலுகா , ரான் கிராமத்தைச் சேர்ந்த 3 வயது பெண் குழந்தை அங்கு திறந்த கிடந்த 30 அடி ஆழ் ஆள்துளை கிணற்றில் தவறி விழுந்ததாக வந்த தகவலையடுத்து தீயணைப்பு படையினர் , மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குழந்தையை மீட்க முயற்சித்து வருகின்றனர். தகவலறிந்த மாவட்ட கலெக்டர் சம்பவ இடத்தை பார்வையிட்டு வருகிறார். மதியம் 1 மணியளவில் குழந்தை தவறி விழுந்துள்ளது. தற்போது 10 அடி ஆழத்தில் குழந்தை சிக்கியுள்ளதால் பத்திரமாக மீட்கப்படுவார் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Ramesh Sargam
ஜன 02, 2024 01:02

இதுபோன்ற 'விபத்துக்களுக்கு' முக்கிய காரணம், மக்களின் carelessness. இதுபோன்ற நிகழ்வுகள் இதற்கு முன்பு எத்தனை நடந்திருக்கிறது. அதை பார்த்தாவது மக்கள் விழிப்புடன் இருக்கவேண்டும். இல்லையே? ஆகையால்தான் இதுபோன்ற 'விபத்துக்கள்' தினம் தினம் எங்காவது நடக்கிறது. முதலில் மக்கள் திருந்தவேண்டும்.


NicoleThomson
ஜன 01, 2024 22:46

கூப்பிடுங்க தமிழக கார்பொரேட் குடும்ப சேனல்களின் நிருபர்களை , இதுபோன்ற இடர்களிலும் அவர்களுக்கு என்று ஒரு அகராதியை உள்ளது


கோகுல், மதுரை
ஜன 01, 2024 22:25

இது ரொம்ப கொடுமை. இது தொடர்ந்து கொண்டே உள்ளது. கிணறு தோண்டி ஒரு மூடி போன்ற கவசம் செய்து மூட வேண்டியது தானே.... இதை பற்றிய விழிப்புணர்வு இன்னும் தேவை. இது குழந்தைகளின் தவறல்ல... அந்த குழாய் தோண்ட காரணமாக இருந்தவர்களின் தவறு. சட்டம் கடுமையாக்கப்பட வேண்டும். தவறிழைத்தவர்கள் சிறை சென்றே தீர வேண்டும். இனி இது தொடர கூடாது. அவரச சட்டம் தேவை.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை