உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அக்னிவீர் சர்ச்சை: ராகுல் குற்றச்சாட்டை மறுத்தது இந்திய ராணுவம்

அக்னிவீர் சர்ச்சை: ராகுல் குற்றச்சாட்டை மறுத்தது இந்திய ராணுவம்

புதுடில்லி: அக்னிவீர் திட்டத்தில் உயிர்தியாகம் செய்த குடும்பத்திற்கு எந்த நிதியுதவி செய்யவில்லை என எதிர்க்கட்சி தலைவர் தெரிவித்த குற்றச்சாட்டை இந்திய ராணுவம் மறுத்துள்ளது.அக்னிபத் திட்டத்தின் கீழ் 2022ம் ஆண்டு இந்திய ராணுவத்தில் இணைந்த பஞ்சாபைச் சேர்ந்த அஜய்குமார் என்பவர் கடந்த ஜன.,18 ல் நடந்த கன்னிவெடி வெடிப்பில் வீரமரணம் அடைந்தார். அவரது குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்கவில்லை எனக்கூறி எதிர்க்கட்சி தலைவர் ராகுல் வீடியோ வெளியிட்டார். அந்த வீடியோவில் ராகுல் கூறியுள்ளதாவது: உண்மையை பாதுகாப்பதே நமது அடிப்படை. ஆனால், வீரமரணம் அடைந்த அக்னிவீரர் அஜய்குமார் குடும்பத்திற்கு அளிக்கப்பட்ட உதவி குறித்து பார்லிமென்டில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பொய் கூறினார். அக்னிவீர் அஜய்குமார் சிங்கின் தந்தையே அவர்களின் பொய்கள் குறித்து உண்மையை தெளிவுபடுத்த வேண்டும். எனவே பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மன்னிப்பு கேட்க வேண்டும் எனக்கூறியிருந்தார். இது தொடர்பாக இந்திய ராணுவம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: பணியில் இருந்த போது உயிர்நீத்த அக்னீவீரர் அஜய்குமாரின் உறவினர்களுக்கு இழப்பீடு வழங்கவில்லை என சமூக வலைதளங்களில் செய்தி வெளியாகி உள்ளது. அஜய்குமார் செய்த உன்னத தியாகத்திற்கு இந்திய ராணுவம் தலைவணங்குகிறது. அவரது இறுதிச்சடங்கு முழு ராணுவ மரியாதையுடன் நடந்தது. அவரது குடும்பத்திற்கு மொத்த தொகையில் ரூ.98.39 லட்சம் வழங்கப்பட்டு விட்டது. அக்னிவீர் திட்டத்தின்படி, மற்ற பணபலன்களான ரூ.67 லட்சம் போலீசார் சரிபார்ப்புக்கு பிறகு விரைவில் வழங்கப்படும். இதன் மூலம் அவர்களுக்கு கிடைக்கும் மொத்த தொகை ரூ.1.65 கோடி ஆக இருக்கும். வீரமரணம் அடைந்த வீரரின் பணபலன்கள், அவர்களின் உறவினர்களுக்கு வழங்கப்படுவது உறுதி செய்யப்படும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

V.JAGADESH KUMAR
ஜூலை 04, 2024 21:28

ராணுவம் எப்போது பணம் கொடுத்தது என்று ஏன் செல்லவில்லை? ராகுல் சொன்ன பிறகு கொடுத்தார்கலா இல்லை முன்பே கொடுத்தார்களா? ஏன் இன்னும் 67 லட்சம் கொடுக்கவில்லை?


JAYARAMAN
ஜூலை 04, 2024 17:49

போபால் விஷ வாயு சம்பவத்தின்போது அப்போதைய பிரதமர் இவர் தந்தை குற்றவாளியை பத்திரமாக அமெரிக்காவிற்கு தப்பிக்க வைத்தவர். இப்பொழுது முதலை கண்ணீர் விடுக்கிறார்


Anand
ஜூலை 04, 2024 17:30

இந்நாட்டிற்கு தேவையில்லை, அழிக்கப்படவேண்டிய தீயசக்தி.


M S RAGHUNATHAN
ஜூலை 04, 2024 17:13

Let the government give the chronology of events. 1. Date of Death 2. Date on which the compensation was announced. 3. Date on which the first tranch of compensation was paid If the details are out, it will be clear who is right and who is wrong. In fact, the government would have paid the amount only by cheque. Ascertain from the beneficiary the details and put it in Public Domain.


vbs manian
ஜூலை 04, 2024 16:38

யார் உண்மை சொல்கிறார்.


ram
ஜூலை 04, 2024 16:26

இந்த ஆளு பிரதம மந்திரியாக வராமல் இருந்தது ஹிந்து மக்கள் பண்ணிய புண்ணியம்


கல்யாணராமன் சு.
ஜூலை 04, 2024 12:55

அக்னிவீருக்கு இந்த இழப்பீடு தொகை எப்போது வழங்கப்பட்டது என்ற விபரம் தெரியுமானால் ராகுல் காந்தியின் மீதும் , வீர மரணமடைந்த அக்னிவீரருடைய தந்தையார் மீதும் வழக்கு தொடரவேண்டும் ...


karthik
ஜூலை 04, 2024 12:52

இவனெல்லாம் எதிர்கட்சியா இருக்க கூட தகுதி இல்லாதவன்..


saravan
ஜூலை 04, 2024 12:47

கைது நடவடிக்கை எடுக்கலாம்...பெரும்பாலான பத்திரிக்கைகள் உண்மையை சொல்வதில்லை இது போன்றை பொய்கள் மட்டுமே மக்களை சென்றடைகின்றன.. நீதிமன்ற படியேறும் பொது னைவருக்கும் தெரிய வருமே... ராகுலுக்கு நடப்பு எதுவுமே தெரியாது பாராளுமன்றத்தில் கூட வாயுக்கு வந்ததை பேசுகிறார் இது வன்மையாக கண்டிக்க தக்கது காரனம் பொன்னான நேரத்தை வீணடிக்கிறார்


naranam
ஜூலை 04, 2024 11:25

ராஹூலுக்கு ப் பொய்யைத் தவிர வேறு ஒன்றும் பேசத் தெரியாது.


மேலும் செய்திகள்