உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தெலங்கானாவில் மேலும் ஒரு பி.ஆர்.எஸ். எம்.எல்.ஏ., காங்.கிற்கு ஓட்டம்

தெலங்கானாவில் மேலும் ஒரு பி.ஆர்.எஸ். எம்.எல்.ஏ., காங்.கிற்கு ஓட்டம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஐதராபாத்: தெலங்கானாவில் பாரதிய ராஷ்ட்ரீய சமிதி கட்சி எம்.எல்.ஏ.க்களின் கட்சி தாவும் படலம் தொடர்கதையாகி வருகிறது. இன்று அக்கட்சியைச் சேர்ந்த ஒரு எம்.எல்.ஏ., காங். கட்சியில் ஐக்கியமானார்.தெலுங்கானாவில் 2023ல் நடந்த சட்டசபை தேர்தலில் காங்., ஆட்சியை கைப்பற்றியது. முதல்வராக ரேவந்த்ரெட்டி உள்ளார்.இம்மாநிலத்தின் நிஜமாபாத் மாவட்டம் ஜக்தியால் தொகுதி பாரதிய ராஷ்ட்ரீய சமீதி கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ.,சஞ்சய்குமார் கடந்த 24-ம் தேதி அக்கட்சியிலிருந்து விலகி முதல்வர் ரேவந்த் ரெட்டி முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.இந்நிலையில் அதே கட்சியை சேர்ந்த செவெல்லா தொகுதியை சேர்ந்த பி.ஆர்.எஸ். கட்சியின் காலே யாடையா என்ற எம்.எல்.ஏ., அக்கட்சியிலிருந்து விலகி இன்று முதல்வர் ரேவந்த் ரெட்டி முன்னிலையில் காங். கட்சியில் இணைந்தார்.இதுவரை பி.ஆர்.கட்சியிலிருந்து 6 எம்.எல்.ஏ.க்கள் மாற்று கட்சிக்கு தாவியுள்ளதால், சந்திரசேகரராவிற்கு பின்டைவை ஏற்படுத்தி வருகிறது


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை