உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இஸ்ரோவுக்கு இன்னொரு வெற்றி: விண்ணில் பாய்ந்தது எஸ்.எஸ்.எல்.வி., - டி3 ராக்கெட்

இஸ்ரோவுக்கு இன்னொரு வெற்றி: விண்ணில் பாய்ந்தது எஸ்.எஸ்.எல்.வி., - டி3 ராக்கெட்

அமராவதி: ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் இருந்து, புவியை கண்காணிக்கும், 'இ.ஓ.எஸ்., - 08' செயற்கைக்கோளை சுமந்தபடி, 'எஸ்.எஸ்.எல்.வி., - டி3' ராக்கெட் இன்று (ஆகஸ்ட் 16) காலை, 9:17 மணிக்கு விண்ணில் பாய்ந்தது. இ.ஒ.எஸ்., செயற்கைக் கோள் புவி சுற்றுவட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டது.இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ, பி.எஸ்.எல்.வி., - ஜி.எஸ்.எல்.வி., வகை ராக்கெட்டுகள் உதவியுடன் செயற்கைக்கோளை விண்ணில் நிலைநிறுத்தி வருகிறது. எடை குறைந்த செயற்கைக்கோளை செலுத்த, எஸ்.எஸ்.எல்.வி., ராக்கெட் வடிவமைக்கப்பட்டுள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=vauhtw3e&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்நிலையில், ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் மைய ஏவுதளத்தில் இருந்து, இன்று காலை, 9:17 மணிக்கு, இ.ஓ.எஸ்., - 08 செயற்கைக்கோளை சுமந்தபடி, எஸ்.எஸ்.எல்.வி., - டி3 ராக்கெட் விண்ணில் பாய்ந்தது. பூமியில் இருந்து, 475 கி.மீ., உயரம் உள்ள சுற்று வட்ட பாதையில் செயற்கைக்கோள் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டது.

சிறப்பு அம்சங்கள்

* புவி கண்காணிப்பு செயல்பாட்டிற்காக, 'இ.ஓ.எஸ்., - 08' செயற்கைக்கோளை இஸ்ரோ வடிவமைத்துள்ளது. இதன் எடை 175.50 கிலோ.* ஓராண்டு ஆயுள் காலம் உடைய அதில், 'எலக்ட்ரோ ஆப்டிக்கல் இன்ப்ராரெட் பேலோட், குளோபல் நேவிகேஷன் சாட்டிலைட் சிஸ்டம் - ரெப்லெக்டோமெட்ரி பேலோட், சிக் யுவி டோசிமீட்டர்' ஆகிய ஆய்வுக் கருவிகள் உள்ளன.* விண்கலத்தில் இடம் ற்றுள்ள ஜி.என்.எஸ். எஸ்.ஆர் கருவி கடல் மேற்பரப்பு காற்றின் செயல்பாடு, மண்ணின் ஈரப்பதம் மதிப்பீடு, நீர்நிலைகள் கண்டறிதல் போன்ற பணிகளுக்கு பயன்படும்.* எதிர்கால தொழில்நுட்ப தேவைக்கான ஆய்வுகளை இந்த கருவிகள் மேற்கொள்ள உள்ளன.* இ.ஒ.எஸ்., செயற்கைக் கோள் பேரிடர் காலங்களில் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள உள்ளது.* இரவிலும் மிகத் துல்லியாக புகைப்படம் எடுக்கும் திறன் கொண்டது.* ககன்யான் திட்டத்தில் விண்வெளிக்கு செல்வோரை கண்காணிக்கும் பணியிலும் இ.ஒ.எஸ்,., செயற்கைக் கோள் ஈடுபட உள்ளது. மிக துல்லியமான மற்றும் அத நவீன கருவிகள் உள்ளிட்டவை செயற்கைக் கோளில் உள்ளன.

திட்டம் 100% வெற்றி

இஸ்ரோ தலைவர் சோம்நாத் அளித்த பேட்டி: புவி கண்காணிப்பு செயல்பாடுகளுக்கான இ.ஒ.எஸ்., செயற்கைக் கோள் புவி சுற்றுவட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டது. இது மிகவும் வெற்றிகரமான பணி.இந்த திட்டம் 100% வெற்றியடைந்துள்ளது. நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். ராக்கெட் திட்டமிட்டபடி, செயற்கைக் கோளை துல்லியமான சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தியுள்ளது. இந்த திட்டத்தில் பணியாற்றிய அனைவருக்கும் வாழ்த்துக்கள். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Ramesh Sargam
ஆக 16, 2024 11:40

இந்திய விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துக்கள். ஒரு பக்கம் நீங்கள் நாட்டிற்கு பெருமை சேர்க்கிறீர்கள். ஆனால் மறுபக்கம் நமது அரசியல் வியாதிகள் நீங்கள் நம் நாட்டிற்கு தேடித்தந்த பெருமையை ஊழல் போண்டவற்றை செய்து சீரழிகிறார்கள்.


Mohammed Jaffar
ஆக 16, 2024 11:40

வாழ்த்துக்கள்.. பெருமை இருக்கு. மிக சிறப்பான ஓன்று. நமது நாட்டின் வளர்ச்சி பாதை மிக அருமை. வாழ்க பாரதம்.


Senthoora
ஆக 16, 2024 17:51

அப்படியே சுனித்தா சகோதரியையும் கூட்டிட்டு வந்தால், அதைவிட பெருமை வேறு என்ன இருக்கு,


அசோகன்
ஆக 16, 2024 11:37

இஸ்ரேவுக்கு வாழ்த்துக்கள் ?????? ஆமா உங்க 65 ஆண்டு பொற்கால ஆட்சியில் ஒவ்வொரு சொட்டு மழை நீர் விழுவதையும் கணித்து வெளியிட்டிர்கள் பாரு..... இப்போ வந்துட்டான் கருத்து சொல்ல......


Anand
ஆக 16, 2024 10:45

வாழ்த்துக்கள்.


V. Kanagaraj
ஆக 16, 2024 10:06

எந்த விண்கலம் சென்றாலும் இயற்கை பேரிடரை முன்பே அறிய முடிவதில்லை. அதற்கான திட்டங்களை செயல் படுத்த வேண்டும்


Swaminathan L
ஆக 16, 2024 09:59

இஸ்ரோ அமைப்பின் சாதனைகள் மிகவும் பெருமைப்படத் தக்கவை. பல துறைகளில் நம் தேசம் பெரும் வளர்ச்சி கண்டிருந்தாலும், விண்வெளி மற்றும் அணுசக்தி துறைகளில் மகத்தான வளர்ச்சியைக் காண்கிறோம்.


Gopalakrishnan
ஆக 16, 2024 09:55

நல்வாழ்த்துக்கள் ISRO...?


மேலும் செய்திகள்









புதிய வீடியோ