உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பறவை காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மே.வங்க சிறுமி: 3 மாத சிகிச்சைக்கு பின் நலம்

பறவை காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மே.வங்க சிறுமி: 3 மாத சிகிச்சைக்கு பின் நலம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: பறவை காய்ச்சலால், பாதிக்கப்பட்ட மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 4 வயது சிறுமி, 3 மாத சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பியதாக உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது.இது தொடர்பாக அந்த அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 4 வயது சிறுமி பறவைக்காயச்சல் நோயால் பாதிக்கப்பட்டார். மூச்சுத்திணறல், அதிக காய்ச்சல் ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட அவர், குழந்தைகள் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். கடந்த பிப்., மாதம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இந்தச் சிறுமி, 3 மாத சிகிச்சைக்கு பிறகு குணமடைந்து வீடு திரும்பினார். அந்த சிறுமி வசித்த வீடு மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் கோழிப்பண்ணைகள் உள்ளதாகவும், அவரை தவிர குடும்பத்தில் யாருக்கும் பாதிப்பு இல்லை எனவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.பறவைக்காய்ச்சலால், இந்தியாவில் மனிதர்கள் பாதிக்கப்பட்ட நிகழ்வு இது இரண்டாவது ஆகும். ஏற்கனவே, 2019 ல் ஒருவர் பறவைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டார் .


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Ramesh Sargam
ஜூன் 12, 2024 11:11

தன்னுடைய மாநிலத்தில் ஏற்பட்ட பறவைக்காய்ச்சல் தொற்றுக்கும் மோடிதான் காரணம் என்று அந்த மமதா கூறுவார். மம்தாவுக்கு இருப்பது ஒரு தொற்று வியாதி.


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை